search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மி்ன்னணு"

    • பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    • நிகழ்ச்சிகயில் உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    பரமத்தி வேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா பொத்தனூர் பேரூராட்சியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டம் 2021-2022 மூலமாக குப்பை சேகரிக்கும் மி்ன்னணு ஆட்டோ வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பொத்தனூர் பேரூராட்சி தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். துணைத் தலைவர் அன்பரசன் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினராக நாமக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க செயலாளர் மதுரா செந்தில் கலந்து கொண்டு வாகனத்தை மக்கள் பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் கணேசன், கபிலர்மலை அட்மா தலைவரும், ஒன்றிய கவுன்சிலரும், ஒன்றிய கழக செயலாளருமான சண்முகம், இளநிலை உதவியாளர் ஜெயசேகர், துப்புரவு மேற்பார்வையாளர் குணசேகரன், வார்டு கவுன்சிலர்கள், மாவட்ட இளைஞர் அணி துணை அமைப்பாளர் பூக்கடை சுந்தர், மாவட்ட துணை செயலாளர்கள் அன்பழகன், மயில்சாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் ரங்கசாமி, பொதுக்குழு உறுப்பினர்கள் சாமிநாதன், சிவக்குமார், பேரூர் நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், பேரூராட்சி அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

    ×