search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார வசதி"

    • தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது.
    • மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை ஒன்றி யத்திற்கு உட்பட்ட தொரடி ப்பட்டு ஊராட்சியில் ஆத்து வளவு என்கிற ஆத்துக்காடு கிராமம் உள்ளது. தொரடிப்பட்டு கிராமத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரம் ஒத்தையடிப் பாதை வழியாகச் சென்றால் ஆத்துக்காடு என்கிற ஆத்து வளவு கிராமத்திற்கு செல்லலாம். அங்கு சுமார் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பல தலைமுறையாக இந்த பகுதியில் வசித்து வந்தாலும் ,இதுவரை மின்சாரம் இல்லாமல் மின் துறையினரின் கண்ணில் படாத ஒரு கிராமமாக இந்த ஆத்துக்காடு கிராமம் உள்ளது. செல்போனுக்கு சார்ஜ் வேண்டுமென்றாலும் அருகில் உள்ள கிராம த்திற்குச் சென்று தான் செல்போன் சார்ஜ் செய்து வருகிறார்கள். உலகமே டிஜிட்டல் மயமாக இருந்து வரும் இந்த கால கட்டத்தில் கல்வரா யன்மலை ஆத்துக்காடு கிராமத்தில் மின்சாரம் இல்லாத ஒரு கிராமமாக இந்த கிராமம் உள்ளது என்பது வேடிக்கை யாகத்தான் உள்ளது. ஆகையால் இப்பகுதி மக்கள் அரசு அதிகாரிகளின் கண்ணில் படாத ஒரு தனி தீவு போல் வசித்து வருகிறார்கள். ஆகையால் இப்பகுதி மக்களுக்கு மின்சாரம் வசதி அமைத்து தர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.
    • சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.

    உடுமலை:

    ஆனைமலை புலிகள் காப்பகம் உடுமலை அமராவதி வனச்சரகத்தில் 13 மலைவாழ் குடியிருப்பு பகுதிகள் உள்ளன. தளிஞ்சி, மாவடப்பு ,ஈசல் தட்டு உள்பட குடியிருப்புகளில் தலா 200-க்கும் அதிகமான வீடுகள் உள்ளன .அடர்ந்த வனப்பகுதியில் இருப்பதால் இங்கு உள்ள குடியிருப்புகளுக்கு மின் வசதி இதுவரை அளிக்கப்படவில்லை.சில ஆண்டுகளுக்கு முன்பு தளிஞ்சி உட்பட்ட பகுதிகளுக்கு சூரிய ஒளியில் மின்சாரம் உற்பத்தி செய்து விளக்குகளை பயன்படுத்த தேவையான சோலார் பேனல்கள் அரசால் வழங்கப்பட்டன. இம்முறையில் தெரு விளக்குகளும் வீடுகளுக்கான பேனல்களும் அமைக்கப்பட்டன .நீண்ட கால கோரிக்கை நிறைவேறிய மகிழ்ச்சியில் பகுதி மக்கள் இருந்தனர். இதனால் இருளில் தவித்து வந்த கிராமங்களுக்கு சூரிய ஒளியும் மின்விளக்குகள் சிறிய ஒளி அளித்தது. இந்த பேனல்களை பயன்படுத்தி சில மின்சார பொருள்களையும் அங்குள்ள மக்கள் பயன்படுத்தி வந்தனர் .

    இதன் மூலம் வனவிலங்குவருவதை அறிந்து கொள்ள குடியிருப்புகளுக்கு தெருவிளக்குகள் பயன்பட்டன .இவ்வாறு பல பயன்களை அளித்துவந்த சோலார் பேனல்களை பராமரிப்பது குறித்துஇப் பகுதி மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. சில ஆண்டுகளுக்கு பின் சோலார் பேனல்கள் படிப்படியாக பழுதடைந்தன.

    சரி பார்க்கும் தொழில்நுட்பம் தெரியாததால் பல மலைவாழ் குடியிருப்புகளில் தெரு விளக்குகள் தற்போது எரிவதில்லை. வீடுகளுக்கு வழங்கப்பட்ட பேனல்களும் அடிக்கடி பழுதடைவதால் அப்பகுதி மக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.

    தெருவிளக்குகளும் காட்சி பொருளாக உள்ளது. மலைவாழ் கிராமங்கள் சிறப்பு திட்டத்தின் கீழ் சோலார் பேனல்களை புதுப்பிக்கவும் மாற்றி அமைக்கவும் மத்திய மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மலைவாழ் கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    • உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது.
    • கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை உற்பத்தி செய்யலாம்.

    திருப்பூர்:

    திருமுருகன்பூண்டியில் புகழ்பெற்ற திருமுருகநாத சுவாமி கோவில் உள்ளது. கோவில் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இயங்கி வருகிறது.பக்தர்கள் வசதிக்காக கோவில் வளாகத்தில் உயர் கோபுர மின் விளக்கு அமைக்க நீலகிரி எம்.பி ராசா, தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து 10 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளார்.உயர் கோபுர மின் விளக்கு அமைப்பதற்கான பணி நடந்து வருகிறது. விரைவில் பயன்பாட்டுக்கு வரும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    அதுபோல் கோவில் மற்றும் பக்தர்கள் பாதுகாப்பு கருதி பக்தர்கள் பங்களிப்பில் கோவில் கர்ப்பகிரகம், சன்னதி, மண்டப உட்பகுதி உள்ளிட்டவற்றில் 16 சி.சி.டி.வி.கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.8 லட்சம் ரூபாய் செலவில் சோலார் மின் தகடு அமைக்கப்பட உள்ளது. கோவிலுக்கு வேண்டிய மின்சாரத்தை இதன் மூலம் உற்பத்தி செய்ய முடிவு செய்துள்ளதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

    ×