search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சார ரெயில் சேவையில் மாற்றம்"

    பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
    சென்னை:

    பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்றும் (ஞாயிற்றுக்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    * மூர்மார்க்கெட்டில் இருந்து திருவள்ளூருக்கு இரவு 8.50 மணிக்கும், அரக்கோணத்துக்கு இரவு 9.15, 10.10 மணிக்கும், பட்டாபிராமுக்கு இரவு 10.35 மணிக்கும், ஆவடிக்கு இரவு 11.25 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்களும், பட்டாபிராம்-மூர்மார்க்கெட்டுக்கு இரவு 7.35, 9.50 மணிக்கு புறப்படும் ரெயில்களும், அரக்கோணம்-மூர்மார்க்கெட்டுக்கு இரவு 9.25, 9.45 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்களும், திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 9.45 மணிக்கு புறப்படும் மின்சார ரெயிலும் முழுவதுமாக இன்று ரத்து செய்யப்படுகின்றன.

    * சென்னை கடற்கரை-அரக்கோணம் நள்ளிரவு 1.20 மணிக்கும், மூர்மார்க்கெட்-ஆவடி நள்ளிரவு 12.15 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில்கள் இன்று முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இதைப்போல் அரக்கோணம்-கடற்கரை அதிகாலை 4 மணிக்கும், ஆவடி-மூர்மார்க்கெட் அதிகாலை 4 மணிக்கும் புறப்படும் மின்சார ரெயில் நாளை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

    * கடற்கரை-திருவள்ளூர் இரவு 7.05 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-திருவள்ளூர் இடையேயும், மூர்மார்க்கெட்- திருத்தணி இரவு 7 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர்-திருத்தணி இடையேயும், மூர்மார்க்கெட்-பட்டாபிராம் இரவு 8.30 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-பட்டாபிராம் இடையேயும், அரக்கோணம்-மூர்மார்க்கெட் இரவு 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-மூர்மார்க்கெட் இடையேயும், திருத்தணி-மூர்மார்க்கெட் இரவு 8.20 மணிக்கு புறப்படும் ரெயில் திருவள்ளூர்-மூர்மார்க்கெட் இடையேயும், திருவள்ளூர்- மூர்மார்க்கெட் இரவு 9.55 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-மூர்மார்க்கெட் இடையேயும், பட்டாபிராம்-மூர்மார்க்கெட் இரவு 10.45 மணிக்கு புறப்படும் ரெயில் ஆவடி-மூர்மார்க்கெட் இடையேயும் இன்று பகுதியாக ரத்து செய்யப்படும்.

    இவ்வாறு அந்த செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 
    ×