search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மின்சக்தி"

    • மின் சக்தி 2047 மின்சார பெருவிழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.
    • கூட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகளை பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    வாழப்பாடி:

    ஒளிமிகு பாரதம் ஒளிமயமான எதிர்காலம்' என்ற வாசகத்தோடு, மின் சக்தி 2047 மின்சார பெருவிழா மற்றும் விழிப்புணர்வு நிகழ்வுகள், தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் வாயிலாக அனைத்து பகுதிகளிலும் நடைபெற்று வருகிறது.

    சேலம் மாவட்டம் ஏத்தாப்பூர் சமுதாய கூடத்தில் நடைபெற்ற இந்த விழாவில், மேற்பார்வை பொறியாளர் பாலசுப்பிரமணி சேலம் செயற்பொறியாளர் புஷ்பலதா முல்லைச் சந்திரன்,

    பெத்தநாயக்கன்பாளையம் உதவி செயற்பொறியாளர் வெங்கடேஸ்வரன், ஏத்தாப்பூர் பேரூராட்சி மன்ற தலைவர் கா. அன்பழகன், மற்றும் உதவி செயற்பொறியாளர்கள், உதவி பொறியாளர்கள், மின்பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.

    கூட்டத்தில் மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துவதற்கான வழிமுறைகள் மற்றும் தரமான மின் சாதனங்களை பயன்படுத்துதல் உட்பட, பல்வேறு விழிப்புணர்வு கருத்துரைகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டது.

    ×