என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான்கறி கடத்தல்"

    • தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள்
    • 10 கிலோ பறிமுதல்

    ஆம்பூர்:

    ஆம்பூர் ஓ.ஏ.ஆர். தியேட்டர் சிக்னலில் போலீசார் வாகன சோத னையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த மோட்டார் சைக்கிளை நிறுத்தி சோதனை நடத்தினர்.

    விசாரணையில், தர்மபுரி மாவட்டம் ராமகுண்டா அள்ளி பகுதியை சேர்ந்த ஜெயபால் (வயது 51), ராஜா தோப்பு பகு தியை சேர்ந்த சிவா (வயது 33) என்பதும், திருத்தணியை அடுத்த பள்ளிப்பட்டு பகுதியில் இருந்து ஒரு சாக்கு பையில் 10 கிலோ எடையுள்ள மான் கறியை தர்மபுரி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து 2 பேரையும் வனத்துறையினரிடம் ஒப்ப டைத்தனர். தொடர்ந்து வனத்துறையினர் மான் கறி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்து, அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×