search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மான் மீட்பு"

    • வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூரை அடுத்த கீழ் கொத்தூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் என்பவரது நிலத்தில் உள்ள சுமார் 70 அடி ஆழமுள்ள கிணற்றில் நேற்று மாலை புள்ளி மான் ஒன்று விழுந்து.

    பின்னர் அப்பகுதியினர் மான் தத்தளித்துக் கொண்டு இருப்பதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

    அதன்பேரில் தீயணைப்பு நிலைய அலுவலர் சரவணன் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சுமார் 2 மணி நேரம் போராடி புள்ளி மானை உயிருடன் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

    பின்னர், வனத்துறை அலுவலர் இந்து உத்தரவின்பேரில் மீட்கப்பட்ட புள்ளி மானை அருகே உள்ள பரவமலை காப்புக்காட்டில் கொண்டு விட்டனர்.

    • புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.
    • மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த வேன்பாக்கம் அரசு மேல் நிலைப் பள்ளி அருகே காட்டுப்பள்ளி வனப்பகுதியில் இருந்து தண்ணீருக்காக வந்த புள்ளிமானை நாய்கள் துரத்தி வந்த நிலையில் பள்ளி வகுப்பறையில் புகுந்த மானை பத்திரமாக அப்பகுதி மக்கள் மீட்டனர்.

    கும்முடிப்பூண்டி அடுத்த மாதவரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்ததின் பேரில் மாதவரம் வனத்துறையினர் மானை மீட்டு வனபகுதியில் கொண்டு சென்று விட்டனர்.

    • பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்
    • வனப்பகுதியில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வலியுறுத்தல்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம்சுற்றியுள்ள வனப்பகுதிகளில் ஏராளமான புள்ளி மான்கள் உள்ளன. நேற்று காலை தண்ணீர் தேடி சுமார் 2 வயது உள்ள பெண் புள்ளிமான் கவுண்டன்ய மகாநதி ஆற்றின் வழியாகவே வந்துள்ளது .

    அப்போது நாய்கள் துரத்தியதால் பயந்துபோன மான் குடியாத்தம் போடிப்பேட்டை நீரேற்று நிலையம் அருகே வந்தது.

    இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் அந்த மானை பத்திரமாக மீட்டு குடியாத்தம் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

    குடியாத்தம் வனச்சரக அலுவலர் வினோபா உத்தரவின் பேரில் வனத்துறையினர் விரைந்துசென்று அந்த மானை மீட்டு கல்லப்பாடி காப்புக்காடுகள் பகுதியில் விட்டனர். தற்போது கோடைகாலம் துவங்கி விட்டதால் வனப்பகுதிகளில் உள்ள தண்ணீர் தொட்டிகளில் தண்ணீர் இல்லை என கூறப்படுகிறது.

    இதனால் வனவி லங்குகள் தண்ணீர் தேடி ஊருக்குள் புகுந்து விடுகிறது கடந்த சில தினங்களுக்கு முன்பும் தண்ணீர் தேடி புள்ளி மான் ஒன்று குடியாத்தம் நகருக்குள் நுழைந்தது.

    வனத்துறையினர் உடனடியாக தனி கவனம் செலுத்தி வனப்பகுதிகளில் உள்ள தொட்டிகளில் தண்ணீர் நிரப்ப வேண்டும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×