search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாநில செயற்குழு கூட்டம்"

    • குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
    • இக்கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.

     ஓசூர் 

    ஓசூர் - தேன்கனி க்கோட்டை சாலையில், தின்னூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    மேலும், மாநில அளவில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஓய்வூதியர்களை திரட்டி, இம்மாத கடைசி வாரத்தில் சென்னையில் மாநில கோரிக்கை சிறப்பு மாநாடு நடத்துவது எனவும், இந்த மாநாட்டிற்கு சத்துணவு துறை அமைச்சர் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை அழைப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

    இக்கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் துரை வரவேற்றார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செயல் அறிக்கை வாசித்தார். இதில் மாநில பொருளாளர் ஜெயசந்திரன், மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.

    முடிவில், மாவட்ட பொருளாளர் சீனிவாசலு நன்றி கூறினார்.

    • கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாநிலத் துணைத் நடைபெற்றது.
    • ,கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    தேன்கனிக்கோட்டை,

    கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டையில் தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகிகள் பதவி ஏற்பு விழா மாநிலத் துணைத் தலைவர் நல்லா கவுண்டன் தலைமையில் நடைபெற்றது.

    கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் சுரேஷ், மாநில பொருளாளர் முத்துச்செல்வன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு கூட்டத்தில் தமிழகத்தில் ஈ அடங்கலை எளிமையாக்க வேண்டும், கிராம நிர்வாக அலுவலர்கள் மாவட்டம் மாறுதலை அனைவருக்கும் கிடைத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும், தமிழக அரசு புதிதாக கொண்டு வந்துள்ள அரசாணை 115-ஐ ரத்து செய்ய வேண்டும்,கருணை அடிப்படையில் பணியில் சேர்ந்தவர்களுக்கு பணிவரம் முறையில் திருத்தம் கொண்டு வர வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    இந்த மாநில செயற்குழுக் கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். கிருஷ்ணகிரி மாவட்ட செயலாளராக அறிவழகன், மாவட்ட தலைவராக லட்சுமணன், மாவட்ட பொருளாளராக ராம்சுரத்குமார் உள்ளிட்ட 10 பேர் பொறு ப்பேற்று க்கொண்டனர்.

    ×