என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
ஓசூரில்ஓய்வூதியர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம்
- குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இக்கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.
ஓசூர்
ஓசூர் - தேன்கனி க்கோட்டை சாலையில், தின்னூரில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் நடந்தது. கூட்டத்தில், சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் உள்ளிட்ட தொகுப்பூதியம் பெறும் அனைவருக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், மாநில அளவில் அனைத்து பகுதிகளிலிருந்தும் ஓய்வூதியர்களை திரட்டி, இம்மாத கடைசி வாரத்தில் சென்னையில் மாநில கோரிக்கை சிறப்பு மாநாடு நடத்துவது எனவும், இந்த மாநாட்டிற்கு சத்துணவு துறை அமைச்சர் மற்றும் தொழிற்சங்க தலைவர்களை அழைப்பது எனவும் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இக்கூட்டத்திற்கு, மாநில தலைவர் ஸ்ரீதரன் தலைமை தாங்கினார்.கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் துரை வரவேற்றார். பொதுச்செயலாளர் கிருஷ்ணமூர்த்தி செயல் அறிக்கை வாசித்தார். இதில் மாநில பொருளாளர் ஜெயசந்திரன், மற்றும் மாநில,மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.
முடிவில், மாவட்ட பொருளாளர் சீனிவாசலு நன்றி கூறினார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்