search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மாணவர்கள் சேர்க்கை கொண்டாட்டம்"

    • விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.
    • பேரூராட்சி தலைவர் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூரில் அரசு பள்ளியில் மாணவர்களின் சேர்க்கை யை அதிகரிக்கும் நோக்க த்தில், சேர்க்கை கொண்டாட்டம் என்ற பெயரில் விழிப்புணர்வு பிரச்சார வாகனம் தொடக்க விழா நிகழ்ச்சி நடைபெற்றது.

    அந்தியூர் கிழக்கு பள்ளியில் இருந்து பேரூராட்சி தலைவர் எம்.பாண்டி யம்மாள் பிரச்சார வாக னத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    அந்தியூர், பிரம்மதேசம், பள்ளிபாளையம், நகலூர், மைக்கேல்பாளையம், எண்ணமங்கலம், சங்கராப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கு சென்ற விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் முடிவில் செல்லம்பாளையம் மாதிரி பள்ளியில் நிறைவடைந்தது.

    முன்னதாக அந்தியூரில் சேர்க்கை கொண்டாட்டம் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் திட்ட அலுவலர் ரவிச்சந்திரன், மாவட்ட ஒருங்கி ணைப்பா ளர்கள் சிவ ராமன், ஞானமூர்த்தி, வட்டார கல்வி அலுவலர்கள் மாதேசா, அபிராமி,

    வட்டார வளமைய மேற்பார்வை யாளர் லிங்கப்பன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்சிநர்கள், இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள், புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்கள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

    ×