search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மறுஆய்வு மனு"

    சபரிமலை அய்யப்பன் கோவில் தீர்ப்புக்கு எதிரான மறுஆய்வு மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு மறுப்பு தெரிவித்துள்ளது. #SupremeCourt #SabarimalaJudgement
    புதுடெல்லி:

    சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்ததை எதிர்த்து மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

    இந்நிலையில், சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு, மனுதாரர்களின் வக்கீல்கள் ஆஜராகி, இந்த மனுக்களை அவசரமாக விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டனர். அதற்கு நீதிபதிகள், “அமர்வில் உள்ள பெண் நீதிபதி இந்து மல்கோத்ரா 30-ந் தேதிவரை மருத்துவ விடுப்பில் உள்ளார். அவர் வந்த பிறகுதான் விசாரணைக்கான தேதி முடிவு செய்யப்படும்” என்று கூறினர்.
    ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி நிர்பயா கற்பழித்து கொல்லப்பட்ட வழக்கில் மறுஆய்வு மனுக்கள் மீது சுப்ரீம் கோர்ட்டு நாளை தீர்ப்பு அளிக்கிறது. #Nirbhaya #MedicalStudent
    புதுடெல்லி:

    டெல்லியில், கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் 16-ந் தேதி இரவு, ஓடும் பஸ்சில் மருத்துவ மாணவி ஒருவர் (நிர்பயா என்ற கற்பனை பெயர்) 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழித்துக்கொல்லப்பட்டார். 6 பேரும் கைது செய்யப்பட்டனர். ஒருவன், சிறுவன் என்பதால் குறைந்தபட்ச தண்டனையுடன் தப்பினான். முக்கிய குற்றவாளி ராம்சிங், சிறையில் தற்கொலை செய்துகொண்டான்.



    மற்ற 4 பேர்களான முகேஷ், பவன், வினய், அக்‌ஷய் ஆகியோருக்கு டெல்லி ஐகோர்ட்டு மரண தண்டனை விதித்தது. அதை மேல்முறையீட்டில் சுப்ரீம் கோர்ட்டு உறுதி செய்தது. முகேஷ், பவன், வினய் ஆகியோர், மரண தண்டனையை மறுஆய்வு செய்யக்கோரும் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்தனர். இம்மனுக்கள் மீது கடந்த மே 4-ந் தேதி தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டது.



    இந்நிலையில், தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அமர்வு, நாளை (திங்கட்கிழமை) அந்த மனுக்கள் மீது தீர்ப்பு அளிக்கிறது. #Nirbhaya #MedicalStudent #tamilnews 
    ×