search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மர்மம் நீடிப்பு"

    • கே.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. (வயது 25). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
    • இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள தொளசம்பட்டி அமரகுந்தி கே.எஸ்.பேட்டை பகுதியை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி. (வயது 25). என்ஜினீயரான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கிரானைட் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.

    இவருக்கும், பொட்டியபுரம் பகுதியை சேர்ந்த என்ஜினீயரான ஷாலினி (வயது 20) என்பவருக்கும் கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு திருமணம் நடைபெற்றது.

    இந்த நிலையில் இவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று முன்தினம் மாலை ஷாலினி வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படு கிறது.

    இதையடுத்து உறவி னர்கள், அவரது உடலை போலீசாருக்கு தெரியாமல் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற் கொண்டு வந்தனர். இது பற்றிய தகவல் தொளசம்பட்டி போலீசாருக்கு கிடைத்தது. உடனடியாக போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ஷாலினி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவரிடம் விசாரணை

    இது தொடர்பாக ஷாலினியின் தாய் பழனியம்மாள் அளித்த புகாரின்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து, ஷாலினியின் கணவர் வெள்ளியங்கிரியிடம் ஷாலினிக்கும், உங்களுக்கும் இடையே என்ன பிரச்சினை இருந்தது? அவர் எப்படி இறந்தார்? என பல்வேறு கேள்விகள் கேட்டு தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    திருமணம் ஆன 40 நாட்களிலேயே புதுப்பெண் ஷாலினி இறந்துள்ளதால் மேட்டூர் ஆர்.டி.ஓ. தணிகாசலம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்.

    இன்று பிரேத பரிசோதனை

    ஷாலினி உடல் இன்று சேலம் அரசு ஆஸ்பத்திரியில் வைத்து பிரேத பரிசோ தனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை கூடம் முன்பு அவரது உறவினர்கள் கதறி அழுதபடி திரண்டு உள்ளனர். இதனால் அந்த பகுதி ேசாகமாக காட்சி அளித்தது. பிரேத பரி சோதனை முடிந்ததும் உடல், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

    இதையொட்டி ஆஸ்பத்திரி வளாகம் முழுவதும் ஓமலூர் டி.எஸ்.பி. மேற்பார்வையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக பிரேத பரிசோ தனை கூடம் முன்பு ஏராள மான போலீசார் குவிக்கப் பட்டுள்ளனர்.

    பிரேத பரிசோதனை அறிக்கையில், ஷாலினி இறந்ததற்கான விபரங்கள் தெரிவிக்கப்படும். அதன் பிறகு விசாரணையை அடுத்தக்கட்டத்திற்கு கொண்டு செல்லப்படும் என போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    ×