search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மருத்துவமனை அனுமதி"

    சீனாவில் ‘அவெஞ்சர்ஸ்’ படம் பார்த்து தேம்பி, தேம்பி அழுத இளம் பெண்ணுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்ட நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. #AvengersEndgame #Avengers #ChineseFan
    பீஜிங்:

    சூப்பர் ஹீரோக்களை ஒன்றிணைக்கும் ‘அவெஞ்சர்ஸ்’ திரைப்படங்களுக்கு உலகம் முழுவதும் பெருந்திரளான ரசிகர்கள் உள்ளனர். இந்த படத்தின் கடைசி பாகமான ‘அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ திரைப்படம் அண்மையில் உலகம் முழுவதும் வெளியாகி வசூலை வாரிக்குவித்து வருகிறது.

    இந்த நிலையில், சீனாவின் நிங்போ நகரைச் சேர்ந்த கல்லூரி மாணவி சியாலி (வயது 21) இந்த திரைப்படத்தை அங்குள்ள ஒரு திரையரங்கில் பார்த்து கொண்டிருந்தார். படத்தின் உணர்வுப்பூர்வமான காட்சிகளைக் கண்டு கண் கலங்கிய அவர், நேரம் செல்லச் செல்ல தேம்பி, தேம்பி அழுதார்.

    இதனால் ஒரு கட்டத்தில் அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கினார். இதையடுத்து, செயற்கை சுவாச உதவியோடு அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

    அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் அதிகமாக அழுததால் நெஞ்சுவலி ஏற்பட்டு மயங்கியதாக தெரிவித்தனர். மருத்துவமனையில் அந்தப் பெண்ணுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  AvengersEndgame #Avengers #ChineseFan 
    தாம்பரத்தில் பஸ்சில் வைத்து மூதாட்டி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அப்போது படுகாயம் அடைந்த மகள் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். #TambaramMurder #MotherMurder
    தாம்பரம்:

    சென்னையை அடுத்த கூடுவாஞ்சேரி காயரம்பேடு கிராமம் திருவள்ளுவர் தெருவை சேர்ந்தவர் தேவராஜ் (வயது 53). காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் முத்தம்மாள். தேவராஜுக்கு 3 சகோதரிகளும், ஒரு சகோதரரும் உள்ளனர். முத்தம்மாளுக்கு அதே பகுதியில் 2 ஏக்கர் நிலம் உள்ளதாக கூறப்படுகிறது.

    முத்தம்மாளை சரியாக கவனிக்காததால் தேவராஜுக்கு சொத்தில் பங்கு கொடுக்கவில்லை என தெரிகிறது. இதுதொடர்பாக அவர்களுக்குள் சொத்து தகராறு இருந்து வந்தது. இதனால் செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் தேவராஜ் வழக்கு தொடர்ந்தார்.



    இந்த வழக்கு நேற்று கோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. இதில் ஆஜராகிவிட்டு முத்தம்மாளும், அவரது மகள் விஜயலட்சுமியும் நேற்று இரவு 7 மணி அளவில் தாம்பரம் பஸ் நிலையம் வந்தனர்.

    பின்னர் குன்றத்தூர் அருகே உள்ள கோவூருக்கு செல்வதற்காக மாநகர பஸ்சில் ஏறி அமர்ந்து இருந்தனர். அப்போது அந்த பஸ்சில் ஏறிய தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து முத்தம்மாளையும், விஜயலட்சுமியையும் சரமாரியாக வெட்டினார்.

    இதில் முத்தம்மாள் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார். படுகாயம் அடைந்த விஜயலட்சுமி சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த சம்பவம் தொடர்பாக தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடக்கிறது.

    மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள பஸ் நிலையத்தில் சொத்துக்காக தனது தாயை மகன் வெட்டி கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
    ×