search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மன்னர் கல்லூரி"

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.
    • விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    மதுரை

    மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் தமிழ்நாடு அரசும் , ஐ.சி.டி. அகாடமியும் இணைந்து இ-சேவை பயிற்சி 11 நாட்களுக்கு நடத்தப் பட்டது. இதில் தினமும் 60 நபர்கள் வீதம் 11 நாட்களுக்கு 660 நபர்களுக்கு பயிற்சி பெற்றனர்.

    இந்நிகழ்வினை கல்லூரி யின் செயலாளர் விஜயராக வன் தொடங்கி வைத்தார். கல்லூரி முதல்வர் ராம சுப்பையா தலைமை தாங்கி னார். சுயநிதி பிரிவு இயக்குநர் பிரபு வாழ்த்துரை வழங்க ஐ.சி.டி. அகாடமியின் அமைப்பாளர் நிரஞ்சனி ஆலோசனை வழங்கினர்.

    இ-சேவை மையத்தின் விளக்க பயிற்சியை அளித்த தோடு தொழில் முனைவோர் திறனை மேம்படுத்த வாடிக்கையாளர்களின் தேவையை முத்ரா லோன் திட்டம் போன்றவற்றிக்கான பயிற்சியை கல்லூரியின் கணினி அறிவியல் துறை பேராசிரியர் ராஜேஸ்வரி விளக்கம் அளித்தார். விழா ஏற்பாட்டினை கல்லூரி நிர்வாகம் செய்திருந்தது.

    • மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது.
    • இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதிப் பிரிவு) வணிகவியல், கணினி பயன்பாட்டுத் துறை சார்பில் "தொழில்முனைவோருக்கான வணிக வாய்ப்புகள்" என்ற தலைப்பில் திறன் மேம்பாட்டு பயிலரங்கம் நடந்தது. பாத்திமா கல்லூரி முதுகலை வணிக மேலாண்மைத் துறை உதவிப்பேராசிரியை சுகன்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு தொழில் முனைவோருக்கான வணிக வாய்ப்புகள் குறித்து விளக்கம் அளித்தார். மேலும் தொழில் முனைவோருக்கான தகுதிகள், மேம்பாட்டுத் திட்டங்கள் பற்றி எடுத்துரைத்தார். செயலாளர் விஜயராகவன் பேசினார். முதல்வர் ராமசுப்பையா, வாழ்த்துரை வழங்கினார். இயக்குனர் பிரபு, உதவிப் பேராசிரியர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.

    முன்னதாக மாணவி சுஜிதா பாலா வரவேற்றார். துறைத் தலைவி நாகசுவாதி விருந்தினரை அறிமுகப்படுத்தினார். உதவிப் பேராசிரியைகள் மஞ்சுளா மற்றும் பாபி நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தனர். மாணவி ஷானு நன்றி கூறினார்.

    • மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.
    • பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்படும்.

    மதுரை

    மதுரை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி (சுயநிதி பிரிவு) மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பியல் துறை மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோபல் சொல்யூசன் தனியார் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

    இந்த ஒப்பந்தத்தில் மாண–வர்களுக்கு ஆட்டோமேஷன் தொழில்நுட்பம் சார்ந்த கருத்தரங்குகள், பயிற்சி பட்டறை மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு திட்ட பயிற்சி இந்த தொழில் நிறுவனத்தில் அளிக்கப்ப–டும்.

    இதன் மூலம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி மாணவர்கள் வேலை–வாய்ப்பு மற்றும் துறை சார்ந்த தொழில் தொடங்கு–வதற்கு உதவியாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புரிந்துணர்வு ஒப்பந் தம் மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரி செயலா–ளர் எம்.விஜயராகவன்,

    கல்லூரி முதல்வர் முனை–வர் அ.ராமசுப்பையா, சுயநிதி பிரிவு இயக்குநர் ச.பிரபு, துறைத்தலைவர் மற்றும் பேராசிரியர்கள் மற்றும் ஐ.பி.சி.எஸ். குளோ–பல் சொல்யூசன் தனியார் நிறுவனத்தின் சார்பில் கிளை இயக்குநர் கே.கார்த்தி, கிளை மேலாளர் கே.சரவணன் ஆகியோர் முன்னிலையில் கையொப்பம் இடப்பட்டது.

    ×