search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய அரசு திட்டம்"

    அடுத்த ஆண்டு முதல் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டை தனி பாடத்திட்டமாக உருவாக்கி, அதில் தேர்வு நடத்துவது என மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. #CBSE #CentralGovernment
    புதுடெல்லி:

    மத்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் விளையாட்டு கல்விக்கும் முக்கியத்தும் அளிக்கப்பட்டு வருகிறது. பள்ளிகளில் விளையாட்டு பீரியடு என தனியாக நேரம் ஒதுக்கப்பட்டு மாணவர்கள் விளையாட்டுக்களில் ஈடுபடுத்தப்பட்டு வருகிறார்கள்.

    ஆனால் இது தனி பாடமாக உருவாக்கப்பட்டு பாடத்திட்டத்தில் சேர்க்கப்படவில்லை. அதற்காக பரீட்சைகளும் கிடையாது.

    இப்போது அதை தனி பாடத்திட்டமாக உருவாக்கி அதிலும் பரீட்சை நடத்துவது என்று மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இது சம்பந்தமாக ஆய்வு நடந்து வருகிறது.

    ஏற்கனவே விளையாட்டு கல்வியை சுகாதாரம் மற்றும் உடற்கல்வி என்று அழைக்கப்பட்டு வந்தது. புதிதாக கொண்டுவரப்படும் பாடத்திட்டத்தின்படி இதை சுகாதாரம், உடற்கல்வி மற்றும் விளையாட்டு என்று மாற்றுகிறார்கள்.

    இது சம்பந்தமாக மத்திய விளையாட்டுத்துறை மந்திரி மற்றும் கல்வி மந்திரிகள் மட்டத்தில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இது அமலுக்கு வருவதற்கு அதிக வாய்ப்பு இருப்பதாக மத்திய விளையாட்டுத்துறை செயலாளர் ராகுல்பட்நாகர் கூறியுள்ளார்.

    மற்ற பாடங்களை போல இதுவும் தனி பாடமாக இருக்கும். அதற்கு பரீட்சையும் நடத்தப்படும். 100 மார்க்குக்கு தேர்வு நடக்கும். அதில் 70 மார்க் எழுத்து தேர்வுக்கும், 30 மார்க் செய்முறை தேர்வுக்கும் வழங்கப்படும்.



    1-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை இந்த பாடம் இருந்தாலும் அவர்களுக்கு பரீட்சை நடத்தப்படமாட்டாது. ஆனால் 8-ம் வகுப்புக்கு மேல் கட்டாயம் பரீட்சை நடத்தப்படும். அதில் வெற்றி பெற்றால்தான் அவர்கள் தேர்வானவர்களாக கருதப்படுவார்கள்.

    இது மட்டுமல்லாமல் இந்த பாடத்திற்காக தினமும் தனியாக வகுப்புகளும் நடத்த வேண்டும். அதற்காக தனி பீரியடு உருவாக்க வேண்டும் என்றும் திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. #CBSE #CentralGovernment

    கோவையை சேர்ந்த ஒரு பெண்ணுக்கு வீடு கட்டுவதற்காக மத்திய அரசின் ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் தவறுதலாக பணம் டெபாசிட் செய்யப்பட்ட சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை பெரியநாயக்கன்பாளையம் அடுத்துள்ள வெள்ளமடை ஊராட்சி காளிபாளையம் பகுதியை சேர்ந்தவர் அன்புசெல்வன். இவரது மனைவி பிருந்தா (வயது 25). இவர் சாமிநாயக்கன்பாளையம் பகுதியிலுள்ள கனரா வங்கியில் கடந்த 2014 ம் ஆண்டு சேமிப்பு கணக்கு தொடங்கினார்.

    இந்த நிலையில் கடந்த 28-ந்தேதி இவரது செல்போனுக்கு ஒரு மெசேஜ் வந்தது. அதில் மத்திய அரசின் பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் 45 ஆயிரம் ரூபாய் பணம் வந்ததாக தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து பிருந்தா தனது வங்கி கணக்கை சரிபார்த்தார்.

    பிருந்தா செல்போனுக்கு வந்திருந்த மெசேஜ்.

    அப்போது கணக்கில் ரூ. 45 ஆயிரம் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து பிருந்தா தனது கணவர் அன்புசெல்வனுடன் வங்கிக்கு சென்றார். வங்கி அதிகாரிகளை சந்தித்து இதுபற்றி தெரிவித்தனர்.

    அப்போது வங்கி அதிகாரி, பெண்கள் வீடு கட்டுவதற்காக மத்திய அரசு பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டம் மூலம் பணம் தருகிறது. அதில் உங்களுக்கு வந்திருக்கும் என்று கூறினார்.

    இது குறித்து பிருந்தா கூறியதாவது, நாங்கள் இதுவரை எந்த விதமான திட்டத்திற்கும் விண்ணப்பிக்கவில்லை. அதனால் எனக்கு பணம் வருவதற்கு வாய்ப்பு இல்லை. பாரத பிரதமர் கடந்த 2015ம் ஆண்டு ஒவ்வொரு குடிமகன் வங்கி கணக்கிலும் 15 லட்சம் ரூபாய் பணம் போடுவதாக கூறியிருந்தார். அதற்காக முன்தொகையாக இந்த பணம் வங்கி கணக்கில் அளிக்கப்பட்டுள்ளதா? அப்படி என்றால் மீதி பணம் எப்போது வரும்? என்றார்.

    ஒருவேளை அதிகாரிகள் தவறாக வேறு பயனாளிக்கு பணம் அனுப்புவதற்கு பதிலாக எனக்கு அனுப்பி விட்டார்களா? என்று தெரியவில்லை. ஒரு வேளை அப்படி நடந்திருந்தால் எனது வங்கி கணக்கிற்கு வந்த பணத்தை திருப்பி தந்து விடுவேன் என்று கூறினார்.

    பிரதான் மந்திரி ஆவாஜ் யோஜனா திட்டத்தின் மூலம் பணம் வருகிறது என்ற தகவல் கிடைத்தவுடன் அந்த பகுதி மக்கள் எல்லோரும் அந்த திட்டத்தில் சேர முயற்சி செய்து வருகின்றனர்.



    ×