search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் நலன்"

    • மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது என ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. பேட்டியளித்தார்.
    • சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது.

    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் கூடல்மலை தெருவில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் ரூ.3 லட்சம் மதிப்பில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் திட்ட பணியையும், அவனியா புரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ. 10 லட்சம் மதிப்பில் மேஜை, நாற்காலி மற்றும் நவீன வகுப்பறையை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா திறந்து வைத்தார்.

    அப்போது அவர் நிருபர்க ளிடம் கூறியதாவது:-

    சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ் மாணவர்களுக்கு அதிகமாக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக மாணவர்களுக்கு டேபிள், சேர், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், நவீன வகுப்பறைகள், பள்ளிக்கூட கட்டிடங்கள் இது போன்ற பணிகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

    234 தொகுதிகளில் மக்களின் 10 கோரிக்கைகள நிறைவேற்றும் வகையில் ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்து அரசு அறிவித்தது. அதன்படி திருப்பரங்குன்றம் தொகுதியில் அரசு கலைக்கல்லூரி வேண்டும் என்றும், விவசாயிகளின் கோரிக்கையான வாசனை திரவிய தொழிற்சாலை வேண்டுமென்றும், கைத்தறி நெசவாளர்கள் கோரிக்கையான நிலையூரில் அரசு கைத்தறி கூடம் வேண்டும் என்றும், அதேபோல் நாகமலை புதுக்கோட்டையில் சிப்காட் அமைக்க வேண்டும் உள்பட 10 கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆனால் இதுவரை கோரிக்கைகள் எந்த நிலையில் உள்ளது என்று தெரியவில்லை? மக்கள் நலனுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் தி.மு.க. அரசு செயல்படுகிறது. வரும் தேர்தல் காலங்களில் தி.மு.க. தோல்வி தழுவும், மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி அமையும்.

    இவ்வாறு அவர் கூறி னார்.

    இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வக்கீல் ரமேஷ், திருப்பரங்குன்றம் ஒன்றியசெயலாளர் நிலையூர் முருகன், பொதுக்குழு உறுப்பினர் மரக்கடை முருகேசன், வட்ட செயலாளர்கள் ஜெய கல்யாணி, நாகரத்தினம், தவுடன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×