என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "மகளிர் தின கொண்டாட்டம்"
- பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர்
- கேக் வெட்டி வழங்கப்பட்டது.
திருப்பூர் :
உலகம் முழுக்க மார்ச் 8 ஆம் தேதி மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் கே.எஸ்.சி., ஸ்கூல் ரோட்டில்உள்ள அந்த கட்சி அலுவலகத்தில் மகளிர் தின கொண்டாட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. அதிமுக கட்சியை சேர்ந்த மகளிரணி நிர்வாகிகள் உள்பட 300 க்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்டனர்.. அதிமுக மாநகர் மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி, திருப்பூர் வடக்கு எம்.எல்.ஏ., கே.என்.விஜயகுமார், திருப்பூர் தெற்கு முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் ஆகியோர் தலைமையில் கேக் வெட்டி வழங்கப்பட்டது. தொடர்ந்து கட்சி அலுவலகத்தில் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன், லக்கி கார்னர், பலூன் உடைக்கும் போட்டிகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு விளையாடி பரிசுகளை பெற்றனர் . இந்த போட்டிகளை முன்னாள் எம்.எல்.ஏ., சு.குணசேகரன் நடத்தி வைத்தார். மாவட்ட இணை செயலாளர் சங்கீதா சந்திரசேகர் வரவேற்றார்.
இந்த நிகழ்ச்சியில் பகுதி கழக செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், பி.கே.எம்.முத்து, ஹரிஹரசுதன், வேலுமணி, பாசறை சந்திரசேகர், யுவராஜ், வக்கீல் முருகேசன், எம்.ஜி.ஆர்., மன்ற தேவராஜ், மோட்டார் பாலு, மதுரபாரதி உள்பட ஏராளமான கட்சி நிர்வாகிகள், மகளிரணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
- ஒவ்வொரு மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
- பெண்கள் ஒவ்வொருவரும் யாரையும் நம்பி நிற்காமல் சுயமரியாதை உடன் வாழ வேண்டும்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் அரசு கலை கல்லூரியில் சர்வதேச மகளிர் தின விழா கொண்டாடப்பட்டது.
இந்நிகழச்சியில் மாணவிகளுக்கு பல்வேறு வகையான போட்டிகள் நடத்தப்பட்டதில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற மாணவிகளுக்கு சான்றிதழ்கள் மற்றும் புத்தகங்கள் வழங்கப்பட்டன.
இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி மாணவி மாணவிகளிடம் பேசும் பொழுது, ஒவ்வொரு மாணவிகளும் படிப்பில் அதிக கவனம் செலுத்த வேண்டும், படிப்பை யாராலும் திருட முடியாது, பெண்கள் ஒவ்வொருவரும் யாரையும் நம்பி நிற்காமல் சுயமரியாதை உடன் வாழ வேண்டும், அப்போதுதான் ஒவ்வொரு பெண்களும் சுயமரியாதையுடன் இருக்க முடியும் என தெரிவித்தார்.
கல்லூரியின் முதல்வர் வெங்கடேஷன் தலைமை தாங்கினார். மேலும் பேரூராட்சி செயல் அலுவலர் கலைராணி மற்றும் பெண் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர். இதில் நாட்டு நலத்திட்ட பணி அலுவலர் முனைவர் கோபிநாத் உள்ளிட்ட ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்