search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதையில் தகராறு"

    • நேற்றிரவு குடிபோதையில் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் கடைவீதியில் சுற்றி திரிந்தார்.
    • சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் எவ்வளவோ கூறியும் ஆரோக்கியராஜ் கேட்காமல் சாலையில் படுத்து கிடந்தார்.

    கும்பகோணம்:

    தஞ்சை மாவட்டம் கும்பகோணம் வடகரை கீழத்தெருவை சேர்ந்தவர் ஆரோக்கியராஜ் (வயது24).

    இவர் நேற்றிரவு குடிபோதையில் கும்பகோணம் அடுத்த திருநாகேஸ்வரம் கடைவீதியில் சுற்றி திரிந்தார். அப்போது அந்த பகுதியில் ரோந்து பணியில் இருந்த திருநீலக்குடி சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேலை, திடீரென குடிபோதையில் ஆரோக்கியராஜ் தனது செல்போனில் படம் பிடித்தார்.

    பின்னர் அவர் நீங்கள் குடித்து விட்டு பணி செய்கிறீர்கள் என ஏதேதோ ஆரோக்கியராஜ் உளறினார். தொடர்ந்து அவர் நடுரோட்டில் படுத்து கிடந்து மறியல் போராட்டத்தில் ஈடுப்பட்டார். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வாகனங்கள் அணிவகுத்து நின்றன. பொதுமக்கள் திரண்டனர்.

    சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பழனிவேல் எவ்வளவோ கூறியும் ஆரோக்கியராஜ் கேட்காமல் சாலையில் படுத்து கிடந்தார். இதையடுத்து பழனிவேல் உதவிக்கு மேலும் 2 போலீசாரை அழைத்தார். அவர்களிடமும் ரோட்டில் படுத்து கிடந்தப்படியே தகராறில் ஈடுபட்டார்.

    இதனை தொடர்ந்து போதை ஆசாமி ஆரோக்கியராஜை போலீசார் அப்புறப்படுத்தி ஆட்டோவில் வலுக்கட்டாயமாக ஏற்றி திருநீலக்குடி போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.

    • மது அருந்தியுள்ளனர்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
    • 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீசார் பூங்கனை கைது செய்தனர்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை பகுதியை சேர்ந்தவர் முனிகிருஷ்ணன் (வயது 34). லாரி டிரைவர்.

    இவரது நண்பர்கள் குமார்(45), பூங்கன்(45), மற்றொரு குமார் (42). இவர்களும் லாரி டிரைவர்கள்.

    இவர்கள் நேற்று மாலை ராயக்கோட்டை தக்காளி மண்டி அருகேயுள்ள அரசு மதுக்கடைக்கு சென்று மது அருந்தியுள்ளனர்.அப்போது அவர்களிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

    இதில் ஆத்திரம் அடைந்த குமார் உள்ளிட்ட 3 பேரும் சேர்ந்து முனிகிருஷ்ணனை சரமாரியாக தாக்கியுள்ளனர்.படுகாயம் அடைந்த முனிகிருஷ்ணன் ராயக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனு மதிக்கப்பட்டுள்ளார்.

    இது குறித்து முனி கிருஷ்ணன் தந்த புகாரின்பேரில் 3 பேர் மீது வழக்கு பதிவு செய்த ராயக்கோட்டை போலீசார் பூங்கனை கைது செய்தனர். மற்ற இருவரையும் தேடி வரு கின்றனர்.

    ×