search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "போதை தடுப்பு மையம்"

    • கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வெள்ளாளர் காலனியில் தொடங்கப்பட்டது.
    • இலவசமாக மருத்துவ சிகிச்சை செயல்படும்

    நாகர்கோவில்:

    போதை பொருட்களால் பாதிக்கப்பட்ட சிறுவர் களுக்கான போதை தடுப்பு ஆலோசனை மற்றும் பரிந்துரை மையம் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் அருகில் உள்ள வெள்ளாளர் காலனியில் தொடங்கப்பட்டது. விழா முன்னாள் மாவட்ட நீதிபதி ஜாண் ஆர்.டி.சந்தோஷம் தலைமையில் ஏ.எம்.கே. போதை தடுப்பு மைய இயக்குனர் அருள்ஜோதி முன்னிலையில் நடைபெற்றது.

    நிகழ்ச்சியை மாவட்ட சமூக நல அலுவலர் சரோஜினி, மாவட்ட நன்னடத்தை அலுவலர் சேவியர், குழந்தைகள் நலக்குழு தலைவர் ரெக்சலின் ஜென்சி, குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள் கிளமென்ட் வின்சிலி, மாணிக்பிரபு ஆகியோர் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தனர். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வேல்முருகன், குழந்தைகள் அவசர காலத்தில் தொடர்பு கொள்வதற்கான தொலைபேசி எண்களை வெளியிட்டு பேசினார்.

    ஏ.எம்.கே. போதை தடுப்பு மைய இயக்குனர் அருள்ஜோதி பேசும்போது, நாகர்கோவிலில் போதை தடுப்பு ஆலோசனை மற்றும் பரிந்துரை மையத்தில் சிறுவர்கள் போதை பழக்கத்தால் பாதிக்கப்பட்டு இருந்தால் ஆலோசனை வழங்குவதுடன் மருத்துவ சிகிச்சை மற்றும் மறுவாழ்வு தேவைப்படும் சிறுவர்களுக்கு 15 படுக்கை வசதி கொண்ட நெல்லை ஏ.எம்.கே. சிறுவர்களுக்கான போதை தடுப்பு மையத்தில் பரிந்துரை செய்து இலவசமாக மருத்துவ சிகிச்சை செயல்படும் என தெரிவித்தார்.

    முன்னதாக மறுவாழ்வு மைய ஆலோசகர் சுசீலா வரவேற்று பேசினார். மறுவாழ்வு மைய திட்ட ஒருங்கிணைப்பாளர் புஷ்பவதி நன்றி கூறினார்.

    ×