search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொறியியல் மாணவர் சேர்க்கை"

    • முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.
    • அனைத்து கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு இன்று முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    • முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்.
    • அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள் உள்ளிட்ட கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சென்னை:

    பொறியியல் மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    பி.இ., பி.டெக்., பி.ஆர்க் படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர் சேர்க்கைக்கு நாளை முதல் ஜூன் 4-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

    அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகள், அண்ணா பல்கலை. மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. http://tneaonline.org, http://tndte.gov.in என்ற இணைய தளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

    • பொதுக்கல்வி, தொழில் முறைக்கல்வி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு
    • மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் ஆகஸ்டு 8-ந்தேதி வெளியிடப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் மாநில பாடத்திட்டத்தில் பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதையடுத்து என்ஜினீயரிங் படிப்புக்கான விண்ணப்ப பதிவு இன்றே தொடங்கியது.

    https://www.tneaonline.org என்ற இணைய தள முகவரியில் விண்ணப்ப பதிவு தொடங்கியது. மாணவர்கள் இதில் சொந்தமாக விண்ணப்பிக்கலாம். தாங்கள் பயின்ற பள்ளிகள், அரசின் இலவச மையங்கள் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக விண்ணப்பிக்க 51 இலவச மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அவை 110 இலவச மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சிறப்பு மையங்களில் மாணவர்கள் உதவி பெறலாம்.

    மாவட்டத்துக்கு குறைந்தபட்சம் 2 இடங்கள் என்ற அடிப்படையில் பாலிடெக்னிக் கல்லூரிகளில் இந்த மையங்கள் செயல்பட உள்ளன. நிறைவு செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும், அதில் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்யவும் கடைசி நாள் ஜூலை 19-ந் தேதி ஆகும். அதே நாளில் என்ஜினீயரிங்கில் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவும் நிறைவடைகிறது.

    இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சமவாய்ப்பு எண் ஜூலை 22-ந்தேதி ஒதுக்கீடு செய்யப்படும். சேவை மையம் மூலம் சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 20-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை நடைபெறும்.

    மாணவர்களுக்கான தர வரிசை பட்டியல் ஆகஸ்டு 8-ந்தேதி வெளியிடப்படும். இதையடுத்து ஆகஸ்டு 9-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை சேவை மையம் மூலம் குறைகளை நிவர்த்தி செய்யலாம்.

    மாற்றுத்திறனாளி, முன்னாள் படைவீரர்கள், விளையாட்டு ஆகிய 3 பிரிவினருக்கு ஆகஸ்டு 16-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை கலந்தாய்வு நடை பெறும்.

    பொதுக்கல்வி, தொழில் முறைக்கல்வி, அரசுப்பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீத ஒதுக்கீடு ஆகிய 3 பிரிவினருக்கு ஆகஸ்டு 22-ந்தேதி முதல் அக்டோபர் 14-ந்தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். துணை கலந்தாய்வு அக்டோபர் 15, 16-ந்தேதி களில் நடைபெறும்.

    • இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று தொடங்குகிறது.
    • அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண் (ரேண்டம் எண்) ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    சென்னை:

    தமிழகத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று வெளியாக உள்ளது.

    இந்நிலையில், பி.இ., பி.டெக்., உள்ளிட்ட இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கான கலந்தாய்வுக்கு இன்று முதல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது. இதனை https://www.tneaonline.org/ என்ற இணையதள முகவரி மூலம் மாணவர்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம்.

    மேலும் மாணவர்கள் தாங்கள் படிக்கும் பள்ளிகள் மூலமாகவும் அல்லது பொறியியல் மாணவர்கள் சேர்க்கை சேவை மையத்திற்குச் சென்றும் விண்ணப்பிக்கலாம்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்கவும், அசல் சான்றிதழ்களைப் பதிவேற்றம் செய்யவும் ஜூலை 19 கடைசி நாளாகும்.

    இதையடுத்து அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் சம வாய்ப்பு எண்(ரேண்டம் எண்) ஜூலை 22-ம் தேதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    விண்ணப்பித்த மாணவர்களின் சான்றிதழ்கள் சரிபார்ப்பு ஜூலை 20-ம் தேதி முதல் ஜூலை 31-ம் தேதி வரை சேவை மையங்களின் மூலமாக நடைபெறும்.

    மாணவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ×