search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொருத்த முடிவு"

    • கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.
    • 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    ஈரோடு, ஏப். 29-

    ஈரோடு மாவட்டத்தில் காவிரி, பவானி ஆறுகளும், பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி, காளிங்கராயன், தடப்பள்ளி-– அரக்கன்கோட்டை வாய்காலி லும் தண்ணீர் ஓடுகிறது.

    இப்பகுதியில் அதிகமாக சாய, சலவை, தோல் ஆலைகள், உட்பட பல ஆலை கழிவுகளை நேரடியாக ஆறு மற்றும் நீர் நிலைகளில் கலக்கின்றனர்.

    இதனை கண்காணிக்க காளிங்கராயன் வாய்க்காலில் மட்டும் 3 இடங்களில் மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் மாசு அளவீடு செய்யும் கருவி அமைத்துள்ளனர்.

    அக்கருவி அளவீடு செய்து ஆன்லைனில் ஈரோடு மற்றும் சென்னையில் உள்ள மாசுகட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்துக்கு அளவீட்டை தெரிவிக்கும்.

    இதற்கிடையில் பவானிசாகர் அணையிலும், பவானி ஆற்றிலும் ஆலை கழிவுகள் திறக்கப்படுவதால் கருப்பு நிறமாக தண்ணீர் செல்வதாக புகார் எழுந்தது.

    இது குறித்து ஈரோடு மாவட்ட சுற்றுச்சூழல் பொறி யாளர் உதயகுமார் கூறியதாவது:

    பவானிசாகர் அணையில் ஆலை கழிவு அல்லது மாசுபட்ட தண்ணீர் கலப்ப தாக புகார் தெரிவி க்கப்ப ட்டது. உடனடியாக அணைக்கு மேல் பகுதி, அணை மற்றும் அணையில் இருந்து பவானி ஆற்றில் செல்லும் தண்ணீர் என அனைத்து இடங்களில் தொடர்ந்து தண்ணீரில் டி.டி.எஸ். (டோட்டல் டிஸால்விடு சால்ட்) உள்ளிட்ட கலப்பு குறித்து பரிசோதித்தோம். அப்படியே குடிக்கும் அளவில் தண்ணீர் உள்ளதை கண்டறிந்தோம்.

    தொடர்ந்து மாசுபாடு ஏற்படுகிறதா? என்பதை கண்காணித்து வருகிறோம். தவிர மாதம் 2 முறை பவானிசாகர் அணையிலும், அணைக்கு முன், பின்பாக அளவீடு செய்வோம்.

    அந்த அளவீட்டுடன் இதனையும் ஒப்பீடு செய்தோம். அணைக்கு பல இடங்களில் இருந்து அடித்து வரப்படும் மண் உள்ளிட்டவை மக்கி, அதன் மூலம் காஸ் அல்லது கருப்பு நிறமாக வெளியேறி இருக்கும் என கருதுகிறோம்.

    மேலும் மாசுகட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஈரோடு மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதியில் காவிரி ஆற்றில் 2 இடங்கள், பவானி ஆற்றில் 2 இடங்கள் கண்டறியப்பட்டு மாசு அளவு கண்டறியும் கருவி அமைக்க உள்ளோம்.

    இதற்கான அனுமதி பெறப்பட்டு கருவிகள் வந்ததும் பொருத்தப்படும்.

    இக்கருவியில் இருந்தும் அளவீடுகள் ஈரோடு மாவட்ட அலுவலகத்துக்கும், சென்னை மாசுகட்டுப்பாட்டு வாரிய ஆணைய அலுவலகத்துக்கும் ஆன்லைனில் சென்றடையும்.

    கூடுதலாக சில இடங்களில் வைக்கலாம் என்பது குறித்து மாவட்ட நிர்வாகம், மாசுக ட்டுப்பாட்டு வாரியத்துக்கு பரிந்துரைத்தால் பரிசீலிப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×