என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொய்கை மாட்டு சந்தை"

    • 50-க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர்
    • அதிகாரிகளிடம் ஏலத்தாரர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுகாவிற்கு உட்பட்ட வாரச் சந்தைகளில் பெரிய சந்தையானது பொய்கை மாட்டுச்சந்தை ஆகும்.

    இவை கடந்த மாதம் முதலே 2023- 24 -ஆம் ஆண்டுக்கான ஏலம் விடுவதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்பட்டிருந்தது. 4 முறை ஏலம் விடப்பட்டு அரசுக்கு சராசரியான தொகை வரவில்லை எனவும் பலதரப்பட்ட காரனத்திற்க்காகவும் ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. மீண்டும் நேற்று 5 வது முறையாக ஏலம் விடப்பட்டது. இதில் அணைக்கட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தி தலைமையிலும், அணைக்கட்டு கிழக்கு ஒன்றிய திமுக செயலாளர் குமார பாண்டியன், மேளாலர் சத்தீஸ்குமார், பொய்கை ஊராட்சிமன்ற தலைவர் பி.கே வெங்கடேசன் ஆகியோரின் முன்னிலையிலும் நடைப்பெற்றன.

    இதில் சுமார் 23 ஏலத்தாரர்கள் முன்பணமாக ரூ.15 ஆயிரம் செலுத்தி ஏலத்தில் ஏலத்தாரர்களாக கலந்து கொண்டனர். முதலில் பொய்கை மாட்டுச்சந்தையில் அடிப்படை வசதிகள் இல்லை எனவும், இதனை அடுத்து பொய்கை ஊராட்சியில் நடக்கும் மாட்டுச்சந்தைக்கு சத்தியமங்கலம் கிராமங்கள் வழியாகவே வாகனங்கள் வந்து செல்கின்றன.

    இதனால் சத்தியமங்கலம் ஊராட்சிகளில் சாலை போக்குவரத்து நெரிசல் மற்றும் அசுத்தம் ஏற்படுகிறது எனவும் சத்தியமங்கலம் ஊராட்சி சேர்ந்தவர்கள் வாக்குவா தத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்ப்பட்டது.

    மேலும் பொய்கை சந்தையில் விடப்படும் ஏலத்தில் நிதி ஒதுக்கும் போது சத்தியமங்கலம் ஊராட்சிக்கும் சேர்த்து நிதி ஒதுக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் ஏலத்தாரர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை அடுத்து முதலில் குறைந்தபட்ச ஏலத் தொகை ரூ. 65 லட்சத்திலிருந்து கேட்கப்பட்டது தொடர்ந்து ஏலத்தரர்கள் ஏலம் கேட்டு வந்த நிலையில் ரூ. 80 லட்சத்து ஓராயிரம் என ஏலம் கேட்கப்பட்டது. இதில் 18 சதவீதம் ஜிஎஸ்டி மற்றும் இரண்டு சதவீதம் வருமான வரி ஆகியவை சேர்த்து ரூ. 96 லட்சத்து ஆயிரத்து 200 ரூபாய்க்கான பொய்கை ஊராட்சியை சேர்ந்த லோகநாதன் என்பவர் ஏலத்தை எடுத்தார்.

    அரசுக்கு சராசரி தொகை வந்துவிட்டதாக லோகநாதன் என்பவருக்கு பொய்கை மாட்டுச் சந்தை ஏலம் வழங்கப்பட்டது. இதில் 50 க்கும் மேற்பட்ட ஏலத்தாரர்கள் கலந்துக்கொண்டனர்.

    • வியாபாரிகள், விவசாயிகள் கடும் அவதி
    • அடிப்படை வசதிகள் இல்லை என புகார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், பொய்கையில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமையன்று மாட்டுச்சந்தை நடைபெறுகிறது.

    இந்த சந்தைக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான கால்நடைகள் கொண்டு வரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது.

    இது தவிர சண்டை சேவல்கள், கோழிகள், புறாக்களும் ஒருபுறம் விற்பனை செய்யப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மாலை நேரத்தில் காய்கறி சந்தையும் நடக்கிறது.

    செவ்வாய் கிழமை தோறும் நடைபெறும் காய்கறி சந்தைக்கு சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் தங்கள் விவசாய நிலங்களில் விளையும் காய்கறிகளை நேரடியாக கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர்.

    இங்கு வாரந்தோறும் பல லட்சம் ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறுகிறது. இதன்மூலம் அரசுக்கும் வருவாய் கிடைக்கிறது. ஆனால் இங்கு அடிப்படை வசதி என்பது இல்லை.

    கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால், மாட்டு சந்தை முழுவதும் குளம்போல் மழைநீர் ஆங்காங்கே தேங்கியுள்ளது. சந்தை வளாகம் முழுவதும் சேறும் சகதியுமாக மாறியுள்ளது. இன்று சுமார் ஆயிரம் கால்நடைகள் விற்பனைக்கு வந்தது. ஆனால் இந்த நிலைமையை பார்த்து பலர் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் கால்நடைகளை முழங்கால் சேற்றில் நிற்க வைத்து விற்பனை செய்தனர்.

    சேரும் சகதியுமான இடங்களிலேயே காய்கறி கடைகளும் அமைக்கப்பட்டு விற்பனை நடந்தது. தற்போது டெங்கு உள்ளிட்ட மர்ம காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் இங்கு தேங்கியுள்ள நீரில் உள்ள கொசுக்களால் தங்களுக்கும் காய்ச்சல் வருமோ என இன்று சந்தைக்கு வந்தவர்கள் பீதி அடைந்தனர்.

    எனவே இந்த மாட்டு சந்தையில் அடிப்படை வசதிகள் மற்றும் மழைநீர் தேங்காத வகையில் கட்டமைப்பு ஏற்படுத்த வேண்டும் என வியாபாரிகள், விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.

    இது குறித்து அந்த கிராம மக்கள் கூறியதாவது:-

    இந்த மாட்டு சந்தை 3 தலைமுறையாக நடந்து வருகின்றது. அடிப்படை வசதிகள் இல்லாததால் 2 மணி வரை நடக்கும் மாட்டு சந்தை 10 மணிக்குள்ளாகவே சந்தைகள் முடிந்து விடுகிறது.

    இந்த சந்தைக்கு வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வருவதால் தங்கும் விடுதி, கழிப்பிட வசதி, மாடுகளை வாகனத்தில் ஏற்ற மேடை ஆகியவற்றை அமைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

    ×