search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் சிறப்பு பஸ்கள்"

    • வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவில் புறப்பட்டு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன.
    • 13, 14 ஆகிய தேதிகளில் இடங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் அதற்கு முந்தைய 12-ந்தேதிக்கு பயணத்தை மாற்றி வருகின்றனர்.

    சென்னை:

    பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை 15-ந்தேதியில் வருகிறது. சனி, ஞாயிறு விடுமுறை நாட்களை தொடர்ந்து 16, 17-ந்தேதிகளில் மாட்டு பொங்கல், காணும் பொங்கல் கொண்டாடப்படுகிறது.

    அரசு விடுமுறை நாட்களுடன் பொங்கல் விடுமுறையும் இணைந்து 4 நாட்கள் வருவதால் சொந்த ஊர்களுக்கு செல்லக்கூடியவர்கள், ரெயில்களில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை மற்றும் சுற்றுப் பகுதியில் வசிக்கும் வெளிமாவட்டத்தை சேர்ந்தவர்கள் சொந்த ஊர்களில் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். பொங்கலுக்கு முன் 3 நாட்களுக்கு முன்பே பயணத்தை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளனர்.

    சென்னையில் இருந்து செல்லக்கூடிய வழக்கமாக ரெயில்கள் மட்டுமின்றி சிறப்பு ரெயில்களிலும் எல்லா இடங்களும் நிரம்பி விட்டன. ஆம்னி பஸ்களில் பல மடங்கு கட்டணம் இருப்பதால் ஏழை மக்கள் அரசு பஸ்களை மட்டுமே நம்பியுள்ளனர்.

    பொங்கலையொட்டி வெளியூர் செல்பவர்கள் வசதிக்காக ஒவ்வொரு ஆண்டும் அரசு சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும். இந்த ஆண்டும் சென்னையில் இருந்து 12-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை 10,749 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பிற ஊர்களில் இருந்து 6,182 சிறப்பு பஸ்கள் என மொத்தம் 16,932 பஸ்கள் இயக்கப்படுகின்றன.

    மக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர் சென்று பண்டிகையை கொண்டாட வசதியாக அரசு போக்குவரத்து கழகங்கள் பஸ்கள் சார்பாக விரிவான ஏற்பாடுகள் செய்யப்படுகின்றன.

    இந்த நிலையில் அரசு விரைவு பஸ்களில் பொங்கல் பண்டிகைக்கான முன்பதிவு கடந்த மாதம் 12-ந்தேதி தொடங்கியது. பொதுமக்கள் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்து வருகின்றனர்.

    பொங்கலுக்கு இன்னும் ஒரு வாரமே இருப்பதால் முன்பதிவு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    வருகிற 13, 14 ஆகிய தேதிகளில் சென்னையில் இருந்து இரவில் புறப்பட்டு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. குறிப்பாக நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில், மதுரை, திருச்சி ஆகிய தென் மாவட்டப் பகுதிகளுக்கும், தேனி, திண்டுக்கல், கும்பகோ ணம், தஞ்சாவூர், கோவை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு செல்லக்கூடிய பஸ்களுக்கும் பெரும்பாலும் இருக்கைகள் நிரம்பி விட்டன.

    13, 14 ஆகிய தேதிகளில் இடங்கள் பெரும்பாலும் நிரம்பி விட்டதால் அதற்கு முந்தைய 12-ந்தேதிக்கு பயணத்தை மாற்றி வருகின்றனர்.

    சென்னையில் இருந்து வெளியூர் செல்ல 3 நாட்களுக்கும் சேர்த்து 1.50 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சராசரியாக ஒரு நாளுக்கு 50 ஆயிரம் பேர் வீதம் முன்பதிவு செய்தனர். பிற நகரங்களில் இருந்தும் அரசு விரைவு பஸ்களுக்கு முன்பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறியதாவது:-

    சென்னையில் இருந்து இரவில் இயக்கக் கூடிய 300 விரைவு பஸ்களிலும் பெரும்பாலான இடங்கள் நிரம்பி விட்டன. பகல் நேர பஸ்களில் ஒரு சில இருக்கைகள் உள்ளன.

    விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பி வருவதால் மற்ற போக்குவரத்து கழக பஸ்களுக்கும் முன்பதிவு விரைவில் தொடங்கப்படும். பொதுமக்கள் கடைசி நேரத்தில் நெரிசலில் பயணிப்பதை தவிர்க்க முன்பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர்.
    • பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம் போல் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னை:

    தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு 15-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) விடுமுறை நாளில் வருகிறது. 14-ந்தேதி (சனிக்கிழமை) போகிப் பண்டிகை.

    மாட்டுப்பொங்கல் மற்றும் திருவள்ளுவர் தினம் 16-ந்தேதி (திங்கட்கிழமை) கரிநாள் மற்றும் உழவர் திருநாள் (செவ்வாய்கிழமை) கொண்டாடப்பட உள்ளது.

    தை பொங்கல் தினம் அரசு விடுமுறை நாளில் வந்ததால் தொடர் விடுமுறை குறைந்துள்ளது. ஆனாலும் 14-ந் தேதி முதல் 17-ந்தேதி வரை 4 நாட்கள் அரசு விடுமுறை நாட்களாகும்.

    அதனால் பொங்கல் பண்டிகையை சொந்த ஊர்களில் கொண்டாட செல்லும் மக்கள் 13-ந்தேதி வெள்ளிக்கிழமை முதல் பயணத்தை தொடர்வதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

    மத்திய, மாநில அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்களில் பணியாற்றுவோருக்கு தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை கிடைப்பதால் வெளியூர் பயணத்திற்கு ரெயிலில் 4 மாதங்களுக்கு முன்பே முன்பதிவு செய்துவிட்டனர்.

    வழக்கமான ரெயில்கள் அனைத்தும் நிரம்பிய நிலையில் அறிவிக்கப்பட்ட சிறப்பு ரெயில்களிலும் காத்திருப்போர் பட்டியல் அதிகரித்து வருகிறது.

    ஏழை, நடுத்தர மக்கள் அரசு பஸ்களை நம்பி தான் வெளியூர் பயணத்தை மேற்கொள்கிறார்கள். அந்த வகையில் அரசு பஸ்களில் கடந்த மாதம் 12-ந் தேதி முதல் முன்பதிவு தொடங்கியது.

    தென் மாவட்டங்களுக்கு செல்லக்கூடிய அரசு விரைவு பஸ்களில் இடங்கள் நிரம்பிவிட்டன. 13, 14 ஆகிய தேதிகளில் பெரும்பாலான வழித்தடங்களில் இயக்கக்கூடிய விரைவு பஸ்களில் இடங்கள் இல்லாததால் பிற போக்குவரத்து கழக பஸ்களுக்கு முன்பதிவு தொடங்கி உள்ளது.

    பஸ், ரெயில்களில் இடங்கள் நிரம்பியதால் பயணத்தை 12-ந்தேதிக்கு (வியாழக்கிழமை) பலர் மாற்றி வருகிறார்கள். சென்னை மற்றும் பிற நகரங்களில் இருந்து இயக்கப்படும். அரசு பஸ்களுக்கு தற்போது 12-ந்தேதிக்கு முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர் செல்ல இதுவரையில் 50 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மேலும் பொங்கல் சிறப்பு பஸ்கள் வழக்கம் போல் இயக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் இருந்து பல்வேறு நகரங்களுக்கு 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்களும், பிற நகரங்களில் வருகிற இருந்தும் சிறப்பு பஸ்கள் 12, 13, 14 ஆகிய மூன்று நாட்களுக்கு இயக்க முடிவு செய்யப்படுகிறது.

    இதற்கான ஆலோசனை கூட்டம் சென்னை தலைமை செயலகத்தில் நாளை (செவ்வாய்கிழமை) போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில் செயலாளர் கோபால் முன்னிலையில் நடக்கிறது. இதில் அனைத்து போக்குவரத்து கழக மேலாண்மை இயக்குனர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்கிறார்கள்.

    பொதுமக்கள் சிரமம் இல்லாமல் சொந்த ஊர்களுக்கு செல்ல விரிவான ஏற்பாடுகளை அரசு போக்குவரத்து கழகங்கள் செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது.

    சென்னையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் வழக்கம்போல 6 சிறப்பு பேருந்து நிலையங்கள் மூலம் பஸ்களை இயக்க உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிடப்படுகிறது.

    பொங்கல் சிறப்பு பஸ்கள் இயக்குவது குறித்த அறிவிப்பு நாளை வெளியாகிறது. இதனை அமைச்சர் சிவசங்கர் அறிவிக்கிறார்.

    ×