search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண் குழந்தை பிறந்தது"

    • நந்தினி (25) . நிறைமாத கர்ப்பி ணியான நந்தினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.
    • 108 ஆம்புலன்சு கோவை நீதி மன்றம் நுழைவு வாயில் அருகே சென்ற போது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது.

    ஈரோடு, 

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் தாலுகா , கடம்பூர் மலைப்பகுதி ஒசபாளையம் பகுதியை சேர்ந்தவர் மாதேவன். இவரது மனைவி நந்தினி (25) . நிறைமாத கர்ப்பி ணியான நந்தினிக்கு நேற்று காலை திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

    இதனை யடுத்து அவரது உறவினர்கள் உடனடியாக 108 ஆம்புல ன்சுக்கு தகவல் கொடுத்தனர். உடனடியாக 108 ஆம்புலன்சு ஒசப்பாளையம் பகுதிக்கு வந்தது.

    அவரை பரிசோதித்த மருத்துவ உதவியாளர் மற்றும் மருத்துவர், செவிலியர் உடனடியாக அவசர சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துக்க ல்லூரி மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்சு மூலம் அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து 108 ஆம்புலன்சு கோவை நீதி மன்றம் நுழைவு வாயில் அருகே சென்ற போது நந்தினிக்கு பிரசவ வலி அதிகமானது.

    இதையடுத்து நிலைமையை புரிந்து கொண்ட 108 ஆம்புலன்சு டிரைவர் ராஜ்குமார் வாகனத்தை ஓரமாக நிறுத்தி மருத்துவ நுட்புநர் விஜய் உதவியுடன் பெண்ணுக்கு பிரசவம் பார்த்தனர்.

    அப்போது நந்தினி- மாதேவன் தம்பதிக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. பின்னர், தாயும்-சேயும் பத்திரமாக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டனர்.

    தக்க நேரத்தில் துரிதமாக செயல்பட்டு பெண்ணுக்கு பிரசவம் பார்த்த 108 ஆம்புலன்சு மருத்துவ நுட்புநர் விஜய் மற்றும் வாகன டிரைவர் ராஜ்குமார் ஆகியோரின் இந்த செயலை கடம்பூர் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

    ×