search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புயல் முன்னெச்சரிக்கை"

    • மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
    • குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டர்

    காவேரிப்பாக்கம்:

    தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளதால் புயல் முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் பனப்பாக்கம் பேரூராட்சியில் தாழ்வான பகுதிகளில் முன்னேற்பாடு பணிகள் மேற்கொண்டுள்ளதையும், கசக்கால்வாய் பகுதிகளில் உள்ள குடிசை வீடுகளையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது கலெக்டர் வளர்மதி, மாவட்ட வருவாய் அலுவலர் சுரேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகநாயகி, பேரூராட்சி செயல் அலுவலர் குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

    • வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நடவடிக்கை
    • உள்ளாட்சி அமைப்புகளுக்கு கலெக்டர்கள் அதிரடி உத்தரவு

    வேலூர்:

    அந்தமான் தீவுகள் அருகே உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது மேலும் வலுவடைந்து புயலாக மாறி சென்னை, புதுச்சேரிக்கு இடையே கரையைக் கடக்கும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

    இதனால் நாளை முதல் 10-ந் தேதி வரை 3 நாள்களுக்கு பலத்த மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

    இந்த புயல் வேலூர், திருவண்ணாமலை, திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பலத்த மழை மூலம் பாதிப்பு ஏற்படுத்த அதிக வாய்ப்பு உள்ளது.

    இதன் காரணமாக வேலூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிர படுத்தப்பட்டுள்ளன.

    ஏற்கனவே அந்தந்த மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் செயல்பட்டு வந்த கட்டுப்பாட்டு அறைகள் மீண்டும் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அதிகாரிகள் உஷார் படுத்தப்பட்டுள்ளனர். மழைநீர் தேங்கும் பகுயதிகள் மற்றும் குடியிருப்பு பகுதிகள் கண்டறியப்பட்டு அங்குள்ள கால்வாய்கள் மீண்டும் தூர்வரப்படுகின்றன.

    இது தவிர மழையால் பாதிக்கப்படும் மக்களை தங்க வைப்பதற்காக முகாம்களை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை மாவட்டங்களில் உள்ளாட்சி அமைப்புகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என கலெக்டர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

    வேலூா் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்வது தொடா்பாக அனைத்து சாா்பு அலுவலா்களுடனான காணொலி ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் குமாரவேல் பாண்டியன் பேசியதாவது:-

    புயல் முன்னெச்சரிக்கை காரணமாக அனைத்து மழை மானிகளையும் அந்தந்த வட்டாட்சியா் தணிக்கை செய்து அவை நல்லமுறையில் இயங்குவதை உறுதி செய்து கொள்ள வேண்டும். மழைமானிகளின் தினசரி மழை அளவுகளை காலை 8 மணிக்குள் அளிக்க வேண்டும்.

    வேலூர் மாநகரில் தாழ்வான, மழைநீா் தேங்கும் பகுதிகளைக் கண்டறிந்து உடனுக்குடன் மழைநீரை அகற்ற வேண்டும். இதற்குண்டான சாதனங்களை தயாா் நிலையில் வைத்திருக்க வேண்டும். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை உடனடியாக அருகே உள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து அனைத்து வசதிகளையும் செய்துதர வேண்டும்.

    சித்தூா் பஸ் நிறுத்தப் பகுதியில் கால்வாயை உடனடியாக தூா்வாரி சீரமைக்க வேண்டும்.

    தொரப்பாடி-அரியூா் சாலையில் நீா் தேங்குவதை சீரமைக்க வேண்டும். மாவட்டம் முழுவதும் தாழ்வான இடங்களில் நீா் தேங்குவதை உடனுக்குடன் வெளியேற்ற வேண்டும்.

    அனைத்து அலுவலா்களும் மழைவெள்ள பாதிப்பு தகவல்களை உடனுக்குடன் வேலூா் மாவட்ட பேரிடா் மேலாண்மை வாட்ஸ்அப் குரூப்பில் பதிவிட வேண்டும். மழையால் பயிா்ச் சேதங்கள் ஏற்பட்டால் அவற்றை எந்தவித புகாா்களுக்கும் இடமளிக்காமல் கணக்கெடுப்பு நடத்தி, நிதியுதவி கோரிக்கையை அரசுக்கு அனுப்பிட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாவட்ட வருவாய் அலுவலா் கே.ராமமூா்த்தி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் க.ஆா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

    ×