search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித யாகப்பர்"

    • 30-ந்தேதி இரவு 7 மணிக்கு புனித யாகப்பரின் தேர்ப்பவனி நடக்கிறது.
    • 31-ந்தேதி மதியம் கொடியிறக்குதல் நடக்கிறது.

    திருவட்டார் அருகே புத்தன்கடையில் புனித யாகப்பர் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் ெதாடங்கியது. தொடர்ந்து திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. விழாவில் அருட்பணியாளர் ரசல்ராஜ் தலைமை தாங்கினார். கொல்வேல் பங்கு அருட்பணியாளர் ஒய்சிலின் சேவியர் மறையுரையாற்றினார். இரவு இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

    நேற்று அருட்பணியாளர் மார்ட்டின் தலைமையில் திருப்பலி நடந்தது. அருட்பணியாளர் சேவியர்ராஜ் மறையுரையாற்றினார்.

    விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலையில் கோட்டார் மறை மாவட்ட அருட்பணியாளார் ஜோசப் தலைமையில் முதல் திருவிருந்து வழங்கும் திருப்பலி நடக்கிறது. அருட்பணியாளர் பிலிப் மறையுரையாற்றுகிறார். தொடர்ந்து விளையாட்டுப்போட்டிகள், உணவுத்திருவிழா போன்றவை நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    30-ந்தேதி காலையில் மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் தலைமையில் வெள்ளிவிழா தம்பதியினருக்கான சிறப்புத்திருப்பலி நடைபெறும். மாலையில் ஜெபமாலை, மாலை ஆராதனை, இரவு 7 மணிக்கு புனித யாகப்பரின் தேர்ப்பவனி நடக்கிறது.

    திருவிழாவின் இறுதி நாளான 31-ந் தேதி குழித்துறை மறைவாவட்ட தொடர்பாளார் ஏசு ரெத்தினம் தலைமையில் திருப்பலி நடைபெறும். நாஞ்சில் பால் பண்ணை மேலாளர் அருட்பணியாளார் ஜெரால்டு ஜஸ்டின் மறையுரையாற்றுகிறார். மதியம் கொடியிறக்குதல், அன்பின் விருந்து மாலையில் மறைக்கல்வி மன்ற ஆண்டுவிழா போன்றவை நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை டி. தாமஸ் தலைமையில், அருட்சகோதரிகள், பங்கு அருட்பணிப்பேரவையினர், பங்கு இறைமக்கள், ஊர் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • 29-ந் தேதி இரவு நற்கருணை பவனியும், அசன விருந்தும் நடக்கிறது.
    • 30-ந்தேதி புனிதரின் திருவுருவ தேர் பவனி நடைபெற உள்ளது.

    நெல்லை தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள கருப்பந்துறை புனித வியாகப்பர் ஆலய திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலை இறை மக்கள் ஊர்வலமாக வந்தனர்.

    பின்னர் ஆலயம் முன்பு உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது. பாளையங்கோட்டை கத்தோலிக்க மறைமாவட்ட முன்னாள் பிஷப் ஜூடு பால்ராஜ் கொடியேற்றி, மறை உரையாற்றினார். இதில் பங்கு தந்தை ஜீவா மற்றும் இறை மக்கள் கலந்து கொண்டனர். இதை தொடர்ந்து தினமும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

    வருகிற 29-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு நற்கருணை பவனியும், அசன விருந்தும் நடக்கிறது. 30-ந் தேதி நண்பகலில் புனிதரின் அன்பு உணவு வழங்கப்படுகிறது. அன்று இரவு 10 மணிக்கு புனிதரின் திருவுருவ தேர் பவனி நடைபெற உள்ளது.

    31-ந் தேதி காலை 10 மணிக்கு கத்தோலிக்க திருச்சபையின் பாளையங்கோட்டை மறைமாவட்ட பிஷப் அந்தோணிசாமி பங்கேற்று மறையுரையாற்ற உள்ளார். மாலையில் கொடியிறக்கம் நடைபெற உள்ளது.

    ×