search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித காணிக்கை அன்னை"

    • பங்குமக்கள் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்
    • திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    கன்னியாகுமரி:

    குளச்சல் புனித காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 27-ந்தேதி (வெள்ளிக்கிழமை) மாலை திருக்கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. தினமும் காலை திருப்பலி மற்றும் மாலை 6 மணிக்கு ஜெப மாலை, புகழ்மாலை, நவநாள் மற்றும் இரவு கலைநிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. 7-ம் நாள் நேற்று காலை 9 மணிமுதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை நடந்தது. மாலை 6 மணியளவில் முக்கிய நிகழ்ச்சியான அன்னையின் திருச்சப்பர பவனி மற்றும் மெழுகுவர்த்தி பவனி குளச்சல் புனித மரியன்னை மேல்நிலை பள்ளியிலிருந்து புறப்பட்டு திருத்தலம் சென்றடைந்தது.பவனியின்போது பங்கு மக்கள் உள்பட திரளானோர் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி அன்னையின் புகழ்பாடி சென்றனர்.

    பவனியில் வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், பங்குப்பணியாளர்கள் டைனிசியஸ்,ஜாண் வினோ, விஜின் பிரைட்,அருள் சகோதரிகள் மற்றும் பங்குநிர்வாகக்குழுவினர் கலந்து கொண்டனர்.தொடர்ந்து திருத்தலத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. கோடிமுனை பங்குப்பணி யாளர் அருள் சீலன் தலைமையில் ஆலஞ்சி பங்குப்பணியாளர் ஜோசப் அருளுரை ஆற்றினார்.

    8 ம் நாள் (இன்று) காலை நோயாளிகளுக்கான குணமளிக்கும் சிறப்பு திருப்பலி, 9-ம் நாள் காலை திருமுழுக்கு திருப்பலி, இரவு 9 மணிக்கு வாண வேடிக்கை, 10-ம் நாள் காலை திருவிழா முதல் திருப்பலி,8 மணிக்கு பெருவிழா திருப்பலி, கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் பேரருள் பணி அலோசியஸ் மரிய பென்சிகர் தலைமையில் குழித்துறை மறை மாவட்ட தலைமை செய லர் பேரருள்பணி ரசல் ராஜ் அருளுரை ஆற்று கிறார். 10 மணிக்கு திருக் கொடியிறக்கம்,மாலை 7 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் விழா நிறைவடைகிறது.

    ×