search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித உபகார மாதா"

    • திருவிழா இன்று தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
    • 27-ந்தேதி தேர்ப்பவனி நடக்கிறது.

    அஞ்சுகிராமம் அருகே நெல்லை மாவட்டம் கன்னங்குளத்தில் 171 ஆண்டுகள் பழமை வாய்ந்த புனித உபகார மாதா ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 28-ந் தேதி வரை நடக்கிறது. முதல் நாளான இன்று மாலை 5 மணிக்கு ஜெபமாலை, மிக்கேல் அதிதூதர் சப்பர பவனி, மாலை 6 மணிக்கு புதிய மாதா கெபி அர்ச்சிப்பு, புதிய இல்லம் திறப்பு விழா, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி போன்றவை நடக்கிறது. நிகழ்ச்சியில் தூத்துக்குடி மறை மாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி தலைமை தாங்குகிறார். மண்ணின் மைந்தர் அருட்பணியாளர் தேவநவமணி முன்னிலை வகிக்கிறார்.

    இரவு 8.30 மணிக்கு நற்பணி சபை பொன்விழா மலர் வெளியீடு நடக்கிறது. நிகழ்ச்சியில் மாதா கெபி, புதிய இல்லம் கட்ட முயற்சி எடுத்த தொழில் அதிபர் த.ஜான்சனை ஆயர் ஸ்டீபன் அந்தோணி பாராட்டி கவுரவிக்கிறார். இதில் சிறப்பு விருந்தினர்களாக திரைப்பட தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோ, தொழில் அதிபர் எஸ்.டி. வேலு, வள்ளியூர் ஒன்றிய தலைவர் சேவியர் செல்வராஜா, தி.மு.க. பிரமுகர் அலெக்ஸ் அப்பாவு, லெவிஞ்சிபுரம் பஞ்சாயத்து முன்னாள் தலைவர் மணிவர்ண பெருமாள் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள். இரவு 9 மணிக்கு சமபந்தி விருந்து நடைபெறும்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, திருப்பலி, மறையுரை, நற்கருணை ஆசீர், கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடக்கிறது.

    ஒன்பதாம் திருவிழாவான 27-ந் தேதி இரவு 9 மணிக்கு தேர்ப்பவனி நடக்கிறது. திருவிழாவின் இறுதி நாளான 28-ந் தேதி அதிகாைல 5.30 மணிக்கு ஜெபமாலை, திருவிழா கூட்டுத்திருப்பலி, மதியம் 2 மணிக்கு அன்னையின் தேர்ப்பவனி, இரவு 7 மணிக்கு சமபந்தி விருந்து, 8 மணிக்கு நலத்திட்ட உதவி வழங்குதல் ஆகியவை நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை பங்குதந்தையர்கள் மரிய ஆல்பின் லியோன், பாலன் மற்றும் அருட்சகோதரிகள், ஆலய நிர்வாக குழுவினர், பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

    ×