search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புனித ஆரோபண அன்னை"

    • ஆகஸ்ட் 6-ந்தேதி திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-ந்தேதி வரை நடைபெறும்.
    • பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று செல்வார்கள்.

    கன்னியாகுமரி :

    தென் தமிழகத்திலும், குமரி மாவட்டத்திலும் மிகவும் பிரசித்தி பெற்ற கத்தோலிக்க கிறித்தவ தேவாலயங்களில் ஒன்றான திக்கணங்கோடு அருகே மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய ஆண்டு பெருவிழா ஆண்டுதோறும் ஆகஸ்ட் 6-ந்தேதி திருகொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 15-ந்தேதி வரை நடைபெறும்.

    குறிப்பாக 6-ந்தேதி மாலை நடைபெறும் திருக்கொடியேற்றத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்வது வழக்கம். 15-ம் நாள் நடைபெறும் அன்னையின் பெருவிழா மற்றும் அன்னையின் தேர் பவனியில் கன்னியாகுமரி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டின் பல்வேறு பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், கேரளா, பாண்டிச்சேரி, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மற்றும் ஜாதி, மத வேறுபாடு இன்றி அனைத்து மத மக்களும் கலந்து கொண்டு தேரில் உப்பு, மிளகு மற்றும் மாலை காணிக்கையாக செலுத்தி அன்னையின் ஆசி பெற்று செல்வது வழக்கம்.

    அதன்படி 588-வது ஆண்டு பெருவிழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி இந்த ஆண்டு பாதுகாவல் பெருவிழாவை முன்னிட்டு 1-ம் திருவிழாவாகிய நேற்று காலை 7.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5.30 மணிக்கு புனித ஜோசப் தொடக்கப்பள்ளியின் புதிய வகுப்பறை கட்டிடம் திறப்பு விழாவும் நடைபெற்றது.

    மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும், தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமை தாங்கி புனித ஆரோபண அன்னையின் உருவம் பொறிக்கப்பட்ட புனித கொடியை அர்ச்சித்து ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் அன்னையின் திருக்கொடியை ஏற்றி வைத்தார். மாத்திரவிளை புனித ஆரோபண அன்னை ஆலய பங்குதந்தை அருட்பணி ஜெஸ்டின் பிரபு முன்னிலை வகித்தார்.

    தொடர்ந்து நடைபெற்ற திருப்பலிக்கு பாண்டிச்சேரி-கடலூர் உயர் மறைமாவட்ட பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட் தலைமையேற்று அருளுரை வழங்கி திருப்பலி நிறைவேற்றி னார். உடன் மாத்திரவிளை வட்டார அருட்பணியாளர்கள் இணைந்து ஜெபித்தார்கள்.

    கொடியேற்ற விழாவில் பங்கு இறைமக்கள், இணை பங்குதந்தை அருட்பணி மகிமைநாதன், மாத்திரவிளை வட்டார அருட்பணியா ளர்கள், பங்கு பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், பக்த ர்கள், அருட்சகோதரிகள், பாதிரியார்கள் மற்றும் குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா போன்ற மாநிலங்க ளில் இருந்தும் ஆயிரக்க ணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. திருவிழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பலியும், மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலையும் தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு திருப்பலியும், மறையுரையும், இரவு 8.30 மணிக்கு நிகழ்ச்சிகளும் நடைபெறுகிறது.

    9-ம் நாள் திருவிழாவான 14-ந்தேதி காலை 8.30 மணிக்கு குழந்தைகளுக்கு முதல் திருவிருந்தும், மாலை 6.30 மணிக்கு ஆடம்பர மாலை ஆராதனையும், இரவு 8.30 மணிக்கு தேர்பவனியும் நடைபெறுகிறது.

    10-ம் நாள் திருவிழாவான 15-ந்தேதி காலை 5 மணி, காலை 6 மணி, திருப்பலியும், காலை 7 மணிக்கு மலையாள திருப்பலியும் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 9 மணிக்கு அன்னையின் விண்ணேற்பு பெருவிழா, இந்திய சுதந்திர தினவிழா ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது.

    இந்த கூட்டுத்திருப்பலிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் மேதகு ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமை யேற்று அருளுரை வழங்கு கிறார். காலை 11 மணிக்கு புனித ஆரோபண அன்னை யின் தேர் பவனியும், இரவு 7 மணிக்கு சிறப்பு நற்கருணை ஆசீர் மற்றும் சிவகாசி வாண வேடிக்கையும் நடைபெறுகி றது. 10-ம் நாள் திருவிழாவில் ஜாதி, மத வேறுபாடு இன்றி குமரி மாவட்டம் மற்றும் தமிழகம், கேரளா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டு அன்னையின் ஆசி பெற்று செல்வார்கள்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜெஸ்டின் பிரபு தலைமையில் இணை பங்குதந்தை அருட்பணி மகிமைநாதன், பங்கு இறை மக்கள், பங்கு அருட்பணி பேரவை நிர்வாகிகள், உறுப்பினர்கள், மற்றும் அருட்சகோதரிகள் செய்து வருகின்றனர்.

    ×