search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுவை அரசு பள்ளி"

    • மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது.
    • பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    புதுச்சேரி:

    புதுவை மாநிலத்தில் 300 அரசு பள்ளிகள் உள்ளது. இதில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவை அரசு வழங்கியது.

    இதற்காக 11 இடங்களில் மத்திய சமையல் கூடங்கள் நிறுவப்பட்டது. இந்த நிலையில் 2018 முதல் அட்சய பாத்திரம் என்ற நிறுவனத்தோடு ஒப்பந்தம் செய்து நவீன சமையல் கூடத்தில் மதிய உணவு தயாரிக்கப்பட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

    இதுதவிர காலையில் பால், வாரம் 3 முட்டை வழங்கப்படுகிறது. இதைத்தொடர்ந்து மாணவர்களுக்கு மாலையில் சிறுதானிய சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை அமல்படுத்த அரசு முடிவு செய்தது. பள்ளிக்கல்வித்துறை அனுப்பிய இந்த கோப்புக்கு கவர்னர் தமிழிசை ஒப்புதல் அளித்துள்ளார்.

    இதுகுறித்து அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:-

    கவர்னர் ஒப்புதலை தொடர்ந்து டெண்டர் கோரியுள்ளோம். டெண்டர் பணிகள் முடிய 2 மாதங்களாகும். அதன்பிறகு ஜனவரி மாதம் இறுதியில் குடியரசு தினத்தில் சிறுதானிய பிஸ்கட் வழங்கும் திட்டத்தை தொடங்க உள்ளோம். நாளுக்கு ஒரு தானிய பிஸ்கட் வழங்க திட்டமிட்டுள்ளோம். மாலையில் பள்ளி முடிந்து மாணவர்கள் வீட்டுக்கு செல்லும் முன்பு அவர்களுக்கு சிறுதானிய பிஸ்கட் வழங்கப்படும் என்றார்.

    • யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர்.
    • அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது.

    புதுச்சேரி:

    புதுவை காமராஜர் மணிமண்டபத்தில் சுற்றுலா துறை சார்பில் சர்வதேச யோகா திருவிழா தொடங்கியது. இந்த திருவிழா வருகிற 7-ந் தேதி வரை நடக்கிறது.

    தொடக்க விழா நிகழ்ச்சிக்கு முதலமைச்சர் ரங்கசாமி தலைமை தாங்கினார். கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் யோகா திருவிழாவை தொடங்கி வைத்தார்.

    சுற்றுலா துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் முன்னிலை வகித்தார். சுற்றுலா துறை செயலாளர் குமார் வரவேற்றார்.

    நமது வாழ்க்கையுடன் யோகக்கலை ஒன்றிணைந்து உள்ளது. யோகக் கலையானது அனைத்து நோய்களுக்கும் பிரதான மருந்தாக உள்ளதை அனுபவ ரீதியாகவே உணரமுடியும், இந்தக் கலையை சர்வதேச அளவில் எடுத்துச் சென்றவர் பிரதமர் மோடி. இஸ்லாமிய நாடுகளிலும் யோகக் கலையைக் கடைப்பிடித்து வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    யோகக் கலை இறைவன் அருளியது. புதுவை மண்ணில் சித்தர்கள் வாழ்ந்துள்ளனர். நமது கோவில்களில் இறைவன் யோக நிலையில் இருப்பதை காணலாம். மனதையும் உடலையும் நலமுடன் வைப்பதற்கு யோக கலை அவசியம். கோபம் உடல் நலத்தை கெடுக்கும். அமைதி உடலை காக்கும் அத்தகைய அமைதியை தருவதாக யோக கலை உள்ளது. மருத்துவமனை நோயாளிகளுக்கு யோக கலை பயிற்சி அளிக்க புதுவையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    அரசு பள்ளிகளில் விருப்பப்படும் மாணவகளுக்கு யோகா கற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முடிவில் சுற்றுலா துறை இயக்குனர் பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

    • புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன்.
    • பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன். (வயது 39). இவர் வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 5 வருடத்திற்க்கு முன்பு கூடப்பாக்கத்தை சேர்ந்த ரகுவின் மகன் பூவரசன் கண்ணன் பணி புரியும் அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்தார். இதற்கிடையே பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியின் போது 7-ம் வகுப்பு மாணவன் ஜவகரை பூவரசன் கடுமையாக தாக்கினார்.

    அப்போது பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆசிரியர் கண்ணன் இருந்ததால் பூவரசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து பூவரசனை அனுப்பிவிட்டார்.

    பின்னர் மீண்டும் 1 வருடம் கழித்து பூவரசன் இதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்ந்து படித்தார்.

    அப்போது மீண்டும் மீண்டும் சக மாணவர்களை பூவரசன் அடித்து தாக்கி பிரச்சினை செய்து வந்ததால் அவரை மீண்டும் பள்ளியில் இருந்து நீக்கினர். இதனால் ஆசிரியர் கண்ணன் மீது பூவரசன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்த போது பூவரசன் திடீரென ஆக்ரோசமாக ஓடிவந்து ஆசிரியர் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினார்.

    இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர் கண்ணன் தடுமாறி கீழே விழுந்த போது பூவரசன் அவரது உடலின் மீது ஏறிக்கொண்டு முகத்திலும் கண்களிலும் பலமாக குத்தினார்.

    இதனால் வலி தாங்காமல் ஆசிரியர் கண்ணன் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் ஓடி வந்து தாக்குதலை தடுத்தனர்.

    இதையடுத்து பூவரசன் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து ஆசிரியர் கண்ணன் மேல் அதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு தாக்குதலில் காயமடைந்ததற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×