search icon
என் மலர்tooltip icon

    புதுச்சேரி

    புதுவையில் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவன்
    X

    புதுவையில் அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவன்

    • புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன்.
    • பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    புதுச்சேரி:

    வில்லியனூர் அருகே அரசு பள்ளியில் புகுந்து ஆசிரியரை சரமாரியாக தாக்கிய மாணவன் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    புதுவை தர்மாபுரி தனகோடி நகரை சேர்ந்தவர் கண்ணன். (வயது 39). இவர் வில்லியனூர் அருகே கூடப்பாக்கத்தில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த 7 ஆண்டுகளாக ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்.

    கடந்த 5 வருடத்திற்க்கு முன்பு கூடப்பாக்கத்தை சேர்ந்த ரகுவின் மகன் பூவரசன் கண்ணன் பணி புரியும் அரசு பள்ளியில் பிளஸ்-1 வகுப்பில் சேர்ந்து படித்தார். இதற்கிடையே பள்ளியில் நடந்த அறிவியல் கண்காட்சியின் போது 7-ம் வகுப்பு மாணவன் ஜவகரை பூவரசன் கடுமையாக தாக்கினார்.

    அப்போது பள்ளியின் ஒழுங்கு நடவடிக்கை குழுவில் ஆசிரியர் கண்ணன் இருந்ததால் பூவரசன் மீது துறைரீதியாக நடவடிக்கை எடுத்து மாற்று சான்றிதழ் கொடுத்து பள்ளியில் இருந்து பூவரசனை அனுப்பிவிட்டார்.

    பின்னர் மீண்டும் 1 வருடம் கழித்து பூவரசன் இதே பள்ளியில் பிளஸ்-1 வகுப்பு சேர்ந்து படித்தார்.

    அப்போது மீண்டும் மீண்டும் சக மாணவர்களை பூவரசன் அடித்து தாக்கி பிரச்சினை செய்து வந்ததால் அவரை மீண்டும் பள்ளியில் இருந்து நீக்கினர். இதனால் ஆசிரியர் கண்ணன் மீது பூவரசன் ஆத்திரத்தில் இருந்து வந்தார். இந்த நிலையில் ஆசிரியர் கண்ணன் பள்ளியில் மாணவர்களுக்கு பாடம் நடத்தி கொண்டு இருந்த போது பூவரசன் திடீரென ஆக்ரோசமாக ஓடிவந்து ஆசிரியர் கண்ணனை தகாத வார்த்தைகளால் திட்டி கையால் தாக்கினார்.

    இதனை சற்றும் எதிர்பார்க்காத ஆசிரியர் கண்ணன் தடுமாறி கீழே விழுந்த போது பூவரசன் அவரது உடலின் மீது ஏறிக்கொண்டு முகத்திலும் கண்களிலும் பலமாக குத்தினார்.

    இதனால் வலி தாங்காமல் ஆசிரியர் கண்ணன் அலறினார். இந்த அலறல் சத்தம் கேட்டு சக ஆசிரியர்கள் ஓடி வந்து தாக்குதலை தடுத்தனர்.

    இதையடுத்து பூவரசன் அங்கிருந்து ஓடிவிட்டார். இது குறித்து ஆசிரியர் கண்ணன் மேல் அதிகாரிகளுக்கு நடந்த சம்பவத்தை தெரிவித்து விட்டு தாக்குதலில் காயமடைந்ததற்காக ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வில்லியனூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×