என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதுப்பிக்க வேண்டும்"

    • அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும்.
    • புதுப்பித்தலின் மூலம் ஆதார் தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யலாம்.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்ட கலெக்டர் கிருஷ்ணனுண்ணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

    அனைவருக்கும் யூ.ஐ.டீ.ஏ.ஐ. என்ற ஆதார் எண் வழங்கி ஆதார் அட்டை ஆவணம் மூலம் நலத்திட்ட உதவிகள், வங்கி சேவை, பத்திர பதிவுக்கு ஆவணமாக்கப்படுகிறது.

    மின்னணு மற்றும் தகவல் தொழில் நுட்பங்களுக்கான அமைச்சகம், ஆதார் எண் வழங்கப்பட்டு 10 ஆண்டு நிறைவடைந்தவர்கள் தங்கள் அடையாள போட்டோ, முகவரி ஆவணங்களை சமர்பிக்க வேண்டும்.

    புகைப்படத்துடன் கூடிய அடையாள ஆவணம், முகவரிக்காக அடையாள ஆவணத்தை சமர்பித்து புதுப்பிக்க வேண்டும்.

    புதுப்பித்தலின் மூலம் ஆதார் தகவல்கள் துல்லியமாக இருப்பதை உறுதி செய்யலாம். இதன் மூலம் அரசின் நலத்திட்ட உதவி கள், சேவைகளை சிரமம் இன்றி பெறலாம்.

    இதற்காக 'மை ஆதார்' என்ற https://www.myaadhaar.uidai.gov.in/ இணைய தளத்தில், மை ஆதார் செயலியிலும் 'அப்டேட் டாக்குமென்ட்' என்ற பிரிவையும் பயன்படுத்தலாம்.

    பொதுமக்கள் இத்தளத்தில் ரூ.25 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம். அல்லது ஆதார் மையம் சென்று ரூ.50 கட்டணம் செலுத்தி புதுப்பிக்கலாம்.

    தொலைபேசி, குறுந்தகவல் மூலம் ஆதார் குறித்து வரும் தகவல்களுக்கு ஆதார் விபரத்தை தர வேண்டாம்.இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    ×