search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "புதியதாக"

    • 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றது.
    • இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 4 மண்டலங்களில் 60 வார்டுகள் உள்ளன. 60 வார்டுகளுக்குட்பட்ட முக்கிய சாலைகள், வீதிகள் என மாநகராட்சியில் தற்போது 23,721 எல்.ஈ.டி தெருவிளக்குகள் பயன்பாட்டில் இருந்து வருகின்றது.

    இந்த தெரு விளக்குகள் அனைத்தும் 2,229 தானி யங்கி கட்டு ப்பாடு கருவி களுடன் இணைக்கப்பட்டு தினசரி இயக்கப்பட்டு வருகின்றது.

    இந்த தெருவிளக்குகளின் செயல்பாடுகள் முழுமை யாக இணையதளம் மூலம் கண்காணிக்கப்பட்டு வருகின்றது. இதனால் தெரு விளக்கு பழுதுகள் அனை த்தும் புகார் கிடைத்த சில நாட்களிலேயே சரி செய்யப்பட்டு வருகின்றது.

    இந்நிலையில் மாநகரா ட்சி விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் புதியதாக 5,431 தெருவிளக்குகள் அமைக்கும் பணி நடை பெற்று வருவதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    இதற்காக ரூ.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும், 15-வது மத்திய நிதிக்குழு நிதியின் கீழ் ஒதுக்கப்பட்டு ள்ளதாக அதிகாரிகள் கூறினர்.

    இது குறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:

    ஈரோடு நகராட்சியாக இருந்து கடந்த 2008-ம் ஆண்டு மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து அருகாமையில் இருந்த பேரூராட்சிகள், ஊராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகள் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டது.

    விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளில் அடிப்ப டை கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படாமல் இருந்து வந்ததையடுத்து முன்னுரிமை அடிப்படை யில் விரிவாக்கம் செய்ய ப்பட்ட பகுதிகளுக்கு குடிநீர், சாலைகள், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் மேம்படுத்தப்பட்டன.

    அந்த வகையில் ஏற்கனவே மாநகராட்சியில் 23 ஆயிரத்து 721 தெரு விளக்குகள் உள்ள நிலையில் தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் கூடுதலாக 5,431 தெரு விளக்குகள் புதியதாக அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றது. இதற்காக ரூ.15.89 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்ப ட்டுள்ளது.

    இந்த புதிய தெரு விளக்குகள் அனைத்தும் மாநகரின் புறநகர் பகுதி களில் அமைக்கப்பட உள்ளது. மின் கட்டணத்தை குறைப்பதற்காக எல்.ஈ.டி. தெருவிளக்குகள் பொரு த்தப்பட உள்ளது.

    புதியதாக பொருத்தப்பட உள்ள தெரு விளக்குகளின் கட்டுப்பாடு கருவிகள் அனைத்தும் இணைதளத்துடன் இணை க்கப்பட உள்ளதால் இயக்குவதில் எவ்வித சிரமமும் ஏற்படாது.

    மேலும் பராமரிப்பு, பழுது தொடர்பான புகார்க ளையும் எளிதில் கையாள முடியும். ஈரோடு சத்தி சாலை 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளதால் ஈரோடு பஸ் நிறுத்ததில் இருந்து சித்தோடு வரை சாலையின் மையப்பகு தியில் புதியதாக தெரு விளக்குகள் அமைக்கப்பட்டு வருகின்றது.

    விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். இது தவிர புதியதாக உருவான குடி யிருப்பு பகுதிகளிலும் தெருவிளக்கு கம்பங்கள் அமைக்கப்பட்டு வருகி ன்றது.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது.
    • கழிவுநீர் வடிகால் முழுமையாக கட்டாமல் இடையில் அப்படியே உள்ளது.

    அந்தியூர்:

    ஈரோடு மாவட்டம் அந்தியூர் பஸ் நிலையம் பகுதியில் இருந்து பவானி ரோடு அண்ணா மடுவு வரை சாலை விரிவாக்க பணி கடந்த 6 மாத காலமாக நடைபெற்று வருகிறது.

    மேலும் ரோட்டின் 2 பகுதிகளிலும் மழை நீர், கழிவுநீர் வடிகால் அமைக்கும் பணியும் நடைபெறுகிறது. இந்த நிலையில் அந்தியூர் பவானி ரோடு ஸ்டேட் வங்கி எதிர்புறம் கழிவுநீர் வடிகால் முழுமையாக கட்டாமல் இடையில் ஒரு பகுதி விடப்பட்ட நிலையில் அப்படியே உள்ளது.

    இதனால் மழைக் கால ங்களில் தண்ணீர் பெருக்கெ டுத்து சாலையில் தேங்கி நிற்கும் நிலை ஏறபட்டுள்ளது. இதனால் போக்குவரத்து பாதிப்பும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது.

    மேலும் கழிவுநீர் சாலையில் தேங்கி நின்றால் துர்நாற்றம் மற்றும் கொசுத் தொல்லைகளால் நோய்த் தொற்று ஏற்படும் அபாயமும் இருப்பதனால் இந்த பகுதியில் நிறுத்தி வைக்கப்ப ட்டுள்ள கழிவு நீர் வடிகால் கட்டும் பணியை விரைந்து முழுமையாக முடிக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுக்கி ன்ற னர்.

    ×