என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதிதாக உழவர் சந்தை"
- தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வு
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
ஜோலார்பேட்டை:
ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் புதியதாக உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை எம்எல்ஏ தேர்வு செய்ய பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலத்தில் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட திருப்பத்தூர் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வந்தனர்.
இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக செலவுகள் அதிகமாக ஆனது இதனால் குறைவான லாபம் கிடைத்தது.
இதனைப் கருத்தில் கொண்டு அப்பகுதி விவசாயிகள் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விளையும் விளைபொருட்களை விற்பனை செய்ய புதியதாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று நேற்று ஜோலார்பேட்டை அருகே மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், ஜோலார்பேட்டை நகர மன்ற துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்