search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிதாக உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு
    X

    புதிதாக உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வு  செய்த காட்சி.

    புதிதாக உழவர் சந்தை அமைக்க இடம் தேர்வு

    • தேவராஜி எம்.எல்.ஏ. ஆய்வு
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    ஜோலார்பேட்டை:

    ஜோலார்பேட்டை நகராட்சி பகுதியில் புதியதாக உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை எம்எல்ஏ தேர்வு செய்ய பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

    ஜோலார்பேட்டை மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் நிலத்தில் விளையும் காய்கறிகள் உள்ளிட்ட திருப்பத்தூர் பகுதிக்கு சென்று விற்பனை செய்து வந்தனர்.

    இதனால் விவசாயிகளுக்கு கூடுதலாக செலவுகள் அதிகமாக ஆனது இதனால் குறைவான லாபம் கிடைத்தது.

    இதனைப் கருத்தில் கொண்டு அப்பகுதி விவசாயிகள் ஜோலார்பேட்டை நகராட்சி பகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் விளையும் விளைபொருட்களை விற்பனை செய்ய புதியதாக உழவர் சந்தை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

    இந்த கோரிக்கையை ஏற்று நேற்று ஜோலார்பேட்டை அருகே மேட்டுசக்கரகுப்பம் பகுதியில் உழவர் சந்தை அமைப்பதற்கான இடத்தை திருப்பத்தூர் மாவட்ட செயலாளரும், ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினருமான க.தேவராஜி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    இந்த ஆய்வின் போது ஜோலார்பேட்டை நகர செயலாளர் ம.அன்பழகன், ஜோலார்பேட்டை நகர மன்ற தலைவர் காவியாவிக்டர், ஜோலார்பேட்டை நகர மன்ற துணைத்தலைவர் இந்திரா பெரியார்தாசன் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள், உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×