search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரமோற்சவ"

    • குமாரபாளையம் அம்மன் நகரில் அமைந்துள்ள அய்யப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது.
    • வருகிற 20-ந் தேதி வரை உஷ பூஜை, பூதபலி பூஜை, நவாஹம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அபிஷேகங்கள் நடைபெற உள்ளன.

    குமாரபாளையம்:

    நாமக்கல் மாவட்டம், குமாரபாளையம் அம்மன் நகரில் அமைந்துள்ள அய்ப்பன் கோயிலில் ஆண்டு தோறும் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி, இந்த ஆண்டுக்கான விழா தொடங்கியது.

    மேல் சாந்தி கவுதம், குமார், மது சர்மா ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று கொடியேற்றி வைத்தனர். வருகிற 20-ந் தேதி வரை உஷ பூஜை, பூதபலி பூஜை, நவாஹம், பஞ்சகவ்யம், கலச பூஜை, அபிஷேகங்கள் நடைபெற உள்ளன. 21-ந் தேதி பள்ளி வேட்டை நிகழ்ச்சியும், 22-ந் தேதி பவானி கூடுதுறை காவிரி ஆற்றில் அய்யப்ப சுவாமிக்கு பஜனை விழாவும் நடைபெறுகிறது.

    தொடர்ந்து, 25-ந் தேதி மண்டல பூஜை, சிறப்பு பஜனை மற்றும் அன்னதானம் நடைபெறுகிறது. பிரம்மோற்சவ விழா வுக்கான ஏற்பாடுகளை அம்மன்நகர் அய்யப்பன் கோயில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.

    ×