search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பாதுகாப்பு வீரர்"

    • கார்த்திகேயன் காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார்.
    • காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    புதுச்சேரி:

    தஞ்சாவூர் திருவையாறு பங்களாத் தெருவைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (வயது42). இவர் திருச்சி டிவிசனுக்கு உட்பட்ட காரைக்கால் ெரயில் நிலையத்தில், ெரயில் பாதுகாப்பு வீரராக பணியாற்றி வருகிறார். சம்பவத்தன்று இவர் நள்ளிரவு, காரைக்கால் ெரயில் நிலையத்தில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, ெரயில் நிலையத்தின் தங்கும் அறை அருகே, 2 ேபர் புகை பிடித்து கொண்டிருந்தனர். அதை பார்த்த கார்த்திகேயன், இங்கே புகை பிடிக்க கூடாது என கண்டித்துள்ளார். அதற்கு, நாங்கள் யார் என தெரியாமல் பேசுகிறீர்கள் என கூறி தகாதவார்த்தைகளால் திட்டி கார்த்திகேயனை 2 பேரும் தாக்கியுள்ளனர். கார்த்திகேயனின் சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் அங்கு ஓடிவந்தனர். இதைப்பார்த்த 2 பேரும் அங்கிருந்து ஓடிவிட்டனர். தப்பி ஓடியவர்கள் பற்றி விசாரித்தபோது அவர்கள், காரைக்கால் இந்திராநகரைச்சேர்ந்த பைசல் (34), ரிஸ்வான் (28) ஆகியோர் என்பது தெரியவந்தது. இந்த சம்பவத்தில் காயம் அடைந்த கார்த்திகேயன், காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றார். அங்கு அவர் கொடுத்த புகாரின் பேரில், காரைக்கால் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பந்தப்பட்ட 2 பேரையும் கைது செய்தனர்.

    ×