search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பவளக்கொடி கும்மியாட்டம்"

    • நவீன உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் தான் உள்ளது.
    • பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும்.

    தாராபுரம் :

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் புதிய பேருந்து நிலையம் எதிரே உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்றம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அரங்கேற்ற விழாவில், பவளக்கொடி கும்மியாட்டம் ஆடி பெண்கள், குழந்தைகள் அசத்தினர். இந்த பவளக்கொடி கும்மியாட்டத்தில் சுமார் 300 க்கும் மேற்பட்ட வள்ளி கும்மி ஆட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். மேலும், நூத்தி நாற்பதாவது மேடை நிகழ்வாக 41 வது அரங்கேற்ற நிகழ்ச்சியாக இந்த கும்மியாட்டம் நடைபெற்றது.

    பவளக்கொடி கும்மியாட்டத்தில்7 வயது முதல் 70 வயது வரை உள்ள அனைவரும் பங்கு பெற்று, ஒலிக்கும் இசைக்கு ஏற்றவாறு தங்களது நடனத்தை ஒன்றாக வெளிப்படுத்தி ஆடினர். இந்த நடனம் காண்போரை பரவசத்தில் ஆழ்த்தும் விதமாக அமைந்து இருந்தது. இதனை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

    மேலும் இந்த கும்மி ஆட்டத்தில் ஆடிய அனைவரும் உடல் ஆரோக்கியத்திற்காகவும், பாரம்பரிய கலையை மீட்டெடுப்பதற்காகவும் ஆடினர். இது மட்டுமல்லாமல் 7 வயது முதல் 20 வயது வரை உள்ள ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என அனைவரும் ஆர்வமுடன் இந்த பவளக்கொடி கும்மியாட்ட கலையை கற்று வருகின்றனர். இந்த கலை மென்மேலும் வளர்ந்தால் தான் நன்றாக இருக்கும் என பவளக்கொடி கும்மியாட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

    இன்றைய நவீன உலகத்தில் பழமையான கலைகள் ஒவ்வொன்றும் அழிந்து வரும் நிலையில் தான் உள்ளது. அவ்வாறு அழிந்தால் அந்த கலையின் பெருமை, அதன் மரபு ஆகியவை அடுத்த தலைமுறையினருக்கு தெரியாமலேயே போகும். எனவே இதனைக் கருத்தில் கொண்டு, பழமையான கலைகளை மீட்டெடுக்க வேண்டும் என கும்மியாட்ட குழுவினர்களால் வலியுறுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    பல்லடம் அடுத்த, செம்மிபாளையம் ஊராட்சி கே.என்.புரம் கிராமத்தில், தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, காவடி மற்றும் கும்மியாட்ட அரங்கேற்ற நிகழ்ச்சி புதுக்காலனி விநாயகர் கோவில் திடலில் நடந்தது. குழந்தை வடிவேலன் கலைக்குழு சார்பில் நடந்த அரங்கேற்ற நிகழ்ச்சியை ஊராட்சி தலைவர் ஷீலா புண்ணியமூர்த்தி தலைமை வகித்து துவக்கி வைத்தார்.

    முன்னதாக முருகப்பெருமானை வணங்கிய பின் கலை நிகழ்ச்சி துவங்கியது. சிறுவர், சிறுமியரின் காவடி கரகாட்டமும், இதையடுத்து, குழந்தை வடிவேலன் கலைக்குழுவினரின் கும்மி ஆட்டம் மற்றும் காவடி ஆட்டம் நடந்தது.சிறுவர்கள், இளம் பெண்கள் மற்றும் தாய்மார்கள் உள்ளிட்டோர் கும்மியாட்டத்தில் பங்கேற்று சிறப்பித்தனர். நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவருக்கும், ஊராட்சி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கி பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

    • உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது.
    • 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர்.

    உடுமலை:

    உடுமலை வட்டம் அந்தியூர் பஞ்சாயத்து சடைய கவுண்டன் புதூரில், உச்சி மாகாளியம்மன் கோயில் முன்பாக பவளக்கொடி கும்மியாட்டம் அரங்கேற்று விழா நடந்தது. இதில் சடைய கவுண்டன் புதூர் மற்றும் ஜீவா நகரை சார்ந்த 46 ஆண்மற்றும்பெண் குழந்தைகள் கலந்து கொண்டனர். இவர்கள் சக்தி கலைக்குழு பவளக்கொடி கும்மியாட்ட பயிற்சியாளர் மகாலிங்கத்திடம் 15 நாட்கள் பயிற்சி பெற்றனர். 16வது நாளில் அரங்கேற்று விழா நடந்தது இதில் குழந்தைகள் மிக சிறப்பாகவும் உற்சகத்துடனும் கும்மியடித்தனர். இந்த நிகழ்ச்சியை ஊர் பொதுமக்கள் ஏற்பாடு செய்து நடத்தினர்.

    • கொங்கு பண்பாட்டுமையம் ஈசன் சலங்கை ஆட்டக்குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.
    • ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு கொண்டு செல்லுதல் நடக்கிறது.

    வீரபாண்டி :

    திருப்பூர் வீரபாண்டி ஸ்ரீமாகாளியம்மன் கோவிலில் 28-ம் ஆண்டு பொங்கல் திருவிழா நேற்று தொடங்கியது. வருகிற 12-ந்தேதி வரை விழா நடக்கிறது.இதையொட்டி தீர்த்தம் எடுத்து வருதல், அம்மன் சக்தி அழைப்பு, அம்மன் சாட்டு, பொங்கல், மாவிளக்கு, மஞ்சள் நீராடல், அம்மன் திருவீதி உலா மற்றும் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    நேற்று காலை 7மணிக்கு அம்மன் சாட்டு, இரவு 12மணிக்கு ஊர்சாந்தி நிகழ்ச்சி நடைபெற்றது. இன்று காலை 5மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவில் பொங்கல், 7மணிக்கு காப்பு கட்டுதல், 7-15மணிக்கு ஸ்ரீ விநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு தீர்த்தம் கொண்டு வர கொமுடி செல்லுதல் நடைபெற்றது.

    இரவு 8மணிக்கு ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து புறப்பட்டு ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் அர்ச்சகர் கும்பம் தாளித்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு வருதல், இரவு 10மணிக்கு பழனிச்சாமி கவுண்டர் ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு படைக்கலம் கொண்டு செல்லுதல் நடக்கிறது.

    10-ந்தேதி அதிகாலை 3மணிக்கு அம்மை அழைத்தல், மாலை 4மணிக்கு ஸ்ரீவிநாயகர் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு மாவிளக்கு கொண்டு செல்லுதல் நடக்கிறது.

    11-ந்தேதி காலை 6மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து தீர்த்தம் ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல், காலை 9மணிக்கு ஸ்ரீமாகாளியம்மன் கோவில் பொங்கல் , 10மணிக்கு ஸ்ரீசவுடேஸ்வர் அம்மன் கோவிலில் இருந்து ஸ்ரீமாகாளியம்மன் கோவிலுக்கு பரிவட்டம் கொண்டு செல்லுதல், பகல் 1மணிக்கு ஸ்ரீமாகாளியம்மனுக்கு பெரிய பூஜை, 3மணிக்கு விநாயகர் கோவிலில் இருந்து பூவோடு மாகாளியம்மன் கோவிலுக்கு கொண்டு செல்லுதல், இரவு 11மணிக்கு கும்பம் கங்கையில் விடுதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    12-ந்தேதி காலை 6மணி முதல் பகல் 2மணி வரை மஞ்சள் நீராடுதல், பகல் 11மணிக்கு மாகாளியம்மன் திருவீதி உலா நடக்கிறது. விழாவில் 9-ந்தேதி மாலை 6-30மணி முதல் 8மணி வரை திருப்பூர் பவளகொடி கும்மியாட்டம் நடக்கிறது. 10-ந்தேதி இரவு 8மணிக்கு கொங்கு பண்பாட்டுமையம் ஈசன் சலங்கை ஆட்டக்குழுவினரின் பெருஞ்சலங்கை ஆட்டம் நடக்கிறது.

    ×