search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பயில்"

    • செல்போன்களில் மூழ்கி கிடக்காதீர்கள்
    • மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை

    நாகர்கோவில்:

    கொட்டாரம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நான் முதல்வன் உயர் கல்வி வேலைவாய்ப்பு கருத்தரங்கம் நேற்று நடந் தது. மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் புகழேந்தி தலைமை வகித்தார். இதில் கலெக்டர் அரவிந்த், பங்கேற்று மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடி, பேசியதாவது:-

    குமரி மாவட்டம் கல்வி மற்றும் எழுத்தறிவில் சிறந்த மாவட்டமாக திகழ்ந்து வரு கிறது. அதற்கேற்ப, பள்ளி மாணவ, மாணவிகள் தங்க ளது தனி திறமைக்கேற்ப கல்வி பயின்று வாழ்வில் ஏற்றம் பெற வேண்டும். பொது அறிவினை வளர்த் துக்கொள்ளும் வகையில் ஒவ்வொரு நாளும் பத் திரிகைகள் மற்றும் அறி வுசார்ந்த புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தினை வழக்கப்படுத்தி கொள்ள வேண்டும். செல்போன்க ளில் மூழ்கி கிடக்ககூடாது. ஒரு பாடத்தை படிக்கும் பொழுது கேள்வி, பதில் களை மட்டும் படிக்காமல் முழு பாடத்தையும் படிக்க வேண்டும்.

    கணிதம், இயற்பியல், வேதியியல், விலங்கியல் படிக்கிற மாணவர்கள் நீட் தேர்விற்கு தயாராக வேண்டும். எளிதாக புரிந்து கொண்டு அதிக மதிப்பெண் பெறக்கூடிய பாடங்களில் அதிக கவனம் செலுத்தி வெற்றிபெறலாம். ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதுவதற்கு ஏதா வது ஒரு பட்டப்படிப்பு போதும். ஐஏஎஸ் படிப்பில் 27 வகையான மத்திய அரசு பணிகள் உள்ளன. அதற்கும் அரசுப்பள்ளி மாணவர்கள் தங்களை தயார்படுத்திக் கொள்ளலாம். பெண்கள் சட்ட கல்வி பயில நிறைய வாய்ப்புகள் உள்ளது. மத் திய பல்கலைக்கழகங்களில் படிக்க நுழைவுத்தேர்வு எழுத வேண்டும். ஆங்கில அறிவு நன்றாக இருக்க வேண்டும். அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகம் மூலம் நடத்தப்படும் சட்ட கல்லூரிகளில் சேர வேண்டுமானால் 12-ம் வகுப் பில் 85 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும். மருத்துவ படிப்பு மட்டுமல்லாமல் அதற்கு நிகரான துறையை யும் தேர்ந்தெடுத்து படிக்க லாம். டிபார்ம், பல் மருத்து வம்போன்ற படிப்புகளையும் படிக்கலாம். கால்நடை மருத் துவம், விவசாயம், பொறியி யல் படிப்பு (தமிழ் வழியில்) படித்து வேலை வாய்ப்பை பெற முடியும்.

    பெற்றோர் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து உங் களை உயர்வான நிலைக்கு கொண்டு வர கஷ்டப்படுகி றார்கள். அவர்களின் கஷ் டங்களை, எண்ணங்களை புரிந்து கொள்ள வேண்டும். தேவையில்லாத பழக்க வழக் கங்களை தவிர்த்து, படிப்பில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் உயரிய இலக்கை எட்டும் நோக்கில் 12-ம் வகுப்பு தேர்வில் கவன சிதைவின்றி தன்னம்பிக்கை யுடனும், விடா முயற்சியுட னும், கடின உழைப்புடனும் தேர்வினை எதிர்கொண்டு வாழ்வில் ஏற்றம்பெறவேண்டும் என்றார்.

    தொடர்ந்து மாணவ, மாணவிகளின் உயர்கல்வி வேலைவாய்ப்பு குறித்து பல்வேறு கேள்விகளுக்கு விளக்கம் அளித்தார். கொட்டாரம் பள்ளியின் உதவி தலைமை ஆசிரியர் தங்கதீபா மற்றும் ஆசிரியர் கள், கல்வி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

    ×