search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பனியன் கம்பெனி அதிபர்"

    நாமக்கலில் கடன் தொல்லை காரணமாக பனியன் கம்பெனி அதிபர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெருந்துறை:

    நாமக்கல் மாவட்டம் கிழக்கு பாலப்பட்டியை சேர்ந்தவர் தீபன் (வயது 30).

    திருப்பூரில் பனியன் கம்பெனி வைத்துள்ளார். மனைவி அனிதா, மகன் பிரசித் ஆகியோருடன் திருப்பூரில் வசித்து வந்தார்.

    தொழில் காரணமாக பல இடங்களில் கடன் பெற்றிருந்தார். இந்த கடன் தொல்லையால் மன உளைச்சலில் இருந்தார்.

    இந்த நிலையில் கிழக்கு பாலப்பட்டியில் தீபனின் உறவினர் ஒருவர் இறந்து போனார். இதற்காக மனைவி, மகனுடன் தீபன் சென்றார்.

    அங்கு மனைவி, மகனை விட்டுவிட்டு அவர் மட்டும் திருப்பூருக்கு காரில் திரும்பி வந்தார். பெருந்துறை விஜயமங்கலம் அருகே உள்ள பெட்ரோல் பங்கின் பின்புறம் காரை நிறுத்தினார்.

    அங்கிருந்து மனைவியை செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். கடன் தொல்லையால் வி‌ஷம் குடித்து விட்டதாகவும், சாகப் போகிறேன் என்றும் கூறி விட்டு போனை வைத்து விட்டார்.

    காரில் தீபன் மயங்கி கிடந்தார். அந்த வழியாக சென்றவர்கள் அவரை பெருந்துறை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தீபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். #tamilnews
    ×