என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பக்தர்கள் சிறப்பு வழிபாடு"
- 3-ம் சனிக்கிழமையான இன்று அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
- பெருமாள் கோவில்களில் நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
திண்டுக்கல்:
புரட்டாசி மாதத்தில் அனைத்து சனிக்கிழமைகளிலும் பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்று வருகிறது. அதன்படி 3-ம் சனிக்கிழமையான இன்று அனைத்து கோவில்களிலும் அதிகாலை முதல் சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
தாடிக்கொம்பு சவுந்திரராஜபெருமாள் கோவிலில் பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பரிவார தெய்வங்களுக்கும் நடந்த பூஜையில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். சுக்காம்பட்டியில் அமைந்துள்ள வாஸ்தீஸ்வரர் கோவிலில் திருவேங்கட மலையப்ப சாமிக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் சுக்காம்பட்டி சித்தர் ஸ்ரீலஸ்ரீ துரை ஆதித்தன் சாமிகள் பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கி ஆசி வழங்கினார்.
இதேபோல் மலையடிவாரம் சீனிவாசபெருமாள், வடமதுரை சவுந்திரராஜபெருமாள், ரெட்டியார்சத்திரம் கதிர்நரசிங்கபெருமாள், கோபிநாதசாமி கோவில், வி.மேட்டுப்பட்டி பேசும்பெருமாள், சன்னதிதெரு ஆஞ்சநேயர்கோவில், சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர், நாகல்நகர் வரதராஜபெருமாள் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் புரட்டாசி 3-ம் சனிக்கிழமை முன்னிட்டு பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்து பூஜைகள் நடைபெற்றன.
நீண்டவரிசையில் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
- திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.
- விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
திண்டுக்கல்:
முழு முதற்கடவுளான விநாயகரின் பிறந்த தினம் விநாயகர் சதுர்த்தியாக இன்று நாடு முழுவதும் உற்சாகமாக கொண்டாட ப்பட்டு வருகிறது. திண்டுக்கல்லில் பிரசித்தி பெற்ற 108 நன்மை தரும் விநாயகர் கோவிலில் பக்தர்கள் அதிகாலை முதல் குடும்பத்துடன் வந்திருந்து விநாயகருக்கு பாலாபிஷே கம் செய்து வழிபட்டனர்.
இங்குள்ள 32 அடி உயர சங்கடஹர சதுர்த்தி விநாயகருக்கு பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்ய ப்பட்டது. அதனை தொட ர்ந்து சிறப்பு அலங்காரம் செய்து மகா தீபாராதனை காட்டப்பட்டது. விநாயகரை வழிபட்ட பக்தர்கள் அதன் முன்பு நின்று புகைப்படம் எடுத்துக் கொண்டனர்.
இதே போல் நகரின் மத்தியில் அமைந்துள்ள வெள்ளை விநாயகர் கோவிலிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. அதிகாலை முதல் நீண்ட வரிசையில் காத்திருந்து பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். நாகல்நகர் ரயிலடி சித்தி விநாயகர் கோவில், ரவுண்டு ரோடு கற்பக விநாயகர் கோவில், நேருஜிநகர் கணபதி கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களிலும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
விநாயகருக்கு பிடித்த மான கொலுக்கட்டை, சுண்டல், பழங்கள், பொரிகடலை போன்றவை படையலாக வைக்கப்பட்டு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்க ப்பட்டன. இதேபோல் மாவட்டத்தின் பல்வேறு விநாயகர் கோவில்களிலும் சதுர்த்தி விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டது.
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு வீடுகளில் வைத்து வழிபட சிறிய வடி விலான களிமண் சிலைகள் தயார் செய்து விற்கப்பட்டன. இந்த சிலைகள் ரூ.10 முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை யில் விற்பனையானது. விதவிதமான வடிவங்களில் பல வண்ணங்களில் தயார் செய்து விற்கப்பட்டன. மேலும் விநாயகருக்கு பிடித்தமான எருக்கம்பூ மாலையும் விற்பனை செய்யப்பட்டன.
இதுதவிர பூஜைக்கு தேவையான பூக்கள், தேங்காய், வாழைப்பழம், பேரிக்காய், கொய்யா, சந்தனம், குங்குமம் உள்ளிட்ட பொருட்களும் அதிக அளவில் விற்பனை யாகிறது.
- ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு செய்தனர்.
- சுவாமி ஊர்வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே அணைப்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆடி அமாவாசையை முன்னிட்டு நேற்று ஏராளமான பக்தர்கள் ஒன்று கூடி சிறப்பு வழிபாடு செய்தனர். மேலும் வைகை ஆற்றில் தங்கள் முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் செய்தனர்.
பிள்ளையார்நத்தம், பெருமாள்கோவில்பட்டி, செக்காபட்டி, சிறுநாயக்கன்பட்டி, சொக்குப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இருந்து பொதுமக்கள் வந்தனர். மேலும் சுவாமி ஊர்வலம் வந்து வைகை ஆற்றில் இறங்கினார்.
அப்போது பக்தர்கள் பக்தி பரவசத்துடன் கோஷங்கள் எழுப்பினர். பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார பணிகளை பிள்ளையார்நத்தம் ஊராட்சி மன்ற தலைவர் முனிராஜா, ஊராட்சி செயலர் சின்னசாமி ஆகியோர் செய்திருந்தனர்.
நிலக்கோட்டை டி.எஸ்.பி. சுகுமாறன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் குரு வெங்கட்ராஜ் (நிலக்கோட்டை), வனிதா (விளாம்பட்டி) மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்