search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் பாதுகாப்பு"

    • சிப்காட் நவீன அரிசி ஆலையில் 2 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
    • இந்த தகவலை கலெக்டர் மதுசூதன் ரெட்டி தெரிவித்துள்ளார்.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியம் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தின் சார்பில் செயல்பட்டு வரும் நவீன அரிசி ஆலையை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    பின்னர் அவர் கூறியதாவது:-

    சிவகங்கை மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்படும் நெல்லினை மழையிலிருந்து நனையாமல் பாதுகாக்கும் வகையில் 60.600 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூறை அமைப்பிலான நெல் சேமிப்பு மேடைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதில் பணி முடிக்கப்பட்ட 31,600 மெட்ரிக் டன்கொள்ளளவு கொண்ட நெல் சேமிப்பு மேடைகள் முதல்-அமைச்சரால் கடந்த 11-ந் தேதி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்ட நெல்லில் 2,000 மெட்ரிக் டன், மானாமதுரை சிப்காட் நவீன அரிசி ஆலை வளாகத்தில் முதல்-அமைச்சரால் திறந்து வைக்கப்பட்ட 10,000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட மேற்கூரை அமைப்பிலான மேடையில் சேமிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 12,573 மெட்ரிக் டன் நெல் சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மற்றும் மானாமதுரை நவீன அரிசி ஆலையின் கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

    தமிழ்நாடு நகர்பொருள் வாணிப கழகம் சிவகங்கை மண்டலத்தில் 2022-23-ல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலமாக விவசாயிகளிடம் இருந்து கொள்முதல் செய்வதற்கு சிவகங்கை மாவட்டத்தில் 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டு, கடந்த 21-ந் தேதி வரை 19,365 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

    அதில் 14,573 மெட்ரிக் டன் நகர்வு செய்யப்பட்டு பாதுகாப்பாக சேமிக்கப்பட்டுள்ளது. இந்த கொள்முதலில் 4,549 விவசாயிகள் பயனடைந்துள்ளனர். இதில் 3,134 விவசாயிகளுக்கு ரூ.29.40 கோடி விவசாயிகளின் வங்கிக்கணக்கில் பணமாக பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    மேலும் மானாமதுரை பகுதிகளில் 25 இடங்களில் இயங்கும் நெல் கொள்முதல் நிலையங்களிலிருந்து நெல் கொள்முதல் செய்யப்பட்டு. நவீன அரிசி ஆலை வளாகத்தில் மேற்கூரை அமைப்பிலான நெல் மேடைகளில் சேமிக்கப்பட்டு பாதுகாப்பாக உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த ஆய்வின்போது தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக மண்டல மேலாளர் அருண்பிரசாத், செயற்பொறியாளர் முருகன், மேலாளர் முத்துப்பாண்டி மற்றும் அரசு அலுவலர்கள் உள்பட பலர் உடனிருந்தனர்.

    ×