search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நெல் அறுவடை செய்யும்"

    • கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.
    • அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    கவுந்தப்பாடி:

    ஈரோடு மாவட்டத்தில் விவசாயிகள் நெல் உள்பட பல்வேறு பயிர்களை நடவு செய்து வருகிறார்கள். இதை யொட்டி மாவட்டத்தின் பல பகுதிகளில் அறுவடை செய்யும் பணி நடந்து வரு கிறது.

    இதே போல் கீழ்பவானி வாய்க்கால் பாசனம் முதல் போக நெல் சாகுபடிக்கு கடந்த ஆகஸ்ட் 12-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.

    இதையொட்டி கவுந்தப்பாடி சுற்று வட்டாரத்தில் கீழ் பவானி வாய்க்கால் பாசனத்தின் மூலம் நடவு செய்யப்பட்ட நெல் அறுவடை பணி தொடங்கி நடந்து வருகிறது.

    பாசன பகுதிகளான பாண்டியன் பாளையம், வேலம்பாளையம், மணியம் பாளையம், அய்யம் பாளை யம், நல்லி கவுண்டனூர், பாப்பாங் காட்டூர் ஆகிய பகுதிகளில் சுமார் 3 ஆயிரத்திற்கும் அதிகமான ஏக்கர் பகுதிகளில் இப்பகுதி விவசாயிகள் தங்களது நிலங்களில் பவானி, தூய மல்லி, மாப்பிள்ளை சம்பா ஏடிடி 38,39, கருப்பு கவுனி, இட்லி குண்டு, பொன்னி மற்றும் பல நெற்பயிர்கள் நடவு செய்துள்ளனர்.

    இதை தொடர்ந்து நெல் கதிர்கள் முற்றி அறுவடைக்கு தயாரானது. இதையடுத்து அறுவடைக்கு தொழிலாளர்கள் இல்லாத நிலை யில் நெல் அறுக்கும் எந்திரத்தின் மூலம் இந்தப் பகுதியில் அறுவடை தொடங்கப்பட்டது.

    இது குறித்து இப்பகுதி விவசாயிகள் பாசன கூட்ட மைப்புச் செயலாளர் பா.மா.வெங்கடாஜலபதி, ஈஸ்வரமூர்த்தி, யூ/8பி யின் தலைவர் ஏகாம்பரம் மற்றும் சர்க்கரை உற்பத்தியாளர் சங்க செயலாளர் மசக் கவுண்டர் ஆகியோர் கூறும்போது,

    பெரும்பா லான விவசாய கூலி தொழிலாளர்கள் 100 நாள் வேலை, பனியன் கம்பெனி மற்றும் மில் வேலைகளுக்கு சென்று விட்டனர்.

    இதனால் நெல் அறுவடை செய்ய ஆட்கள் கிடைப்பதில்லை. தற்போது எந்திரத்தின் மூலம் ஏக்கருக்கு ரூ.1500 முதல் ரூ.2500 வரை கொடுத்து நெல் அறுவடை செய்யும் நிலை ஏற்பட்டு உள்ளது என்று கூறினார்கள்.

    ×