search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நுழைய தடை"

    • 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்
    • 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

    புதுச்சேரி:

    காரைக்காலை அடுத்த திரு.பட்டினத்தை சேர்ந்தவர் தொழிலதிபர் ராமு. இவரது 2-வது மனைவி எழிலரசி. எழிலரசி மற்றும் விக்ரமன் ஆகிய 2 பேர் மீதும் புதுச்சேரி முன்னாள் சபாநாயகர் சிவக்குமார் கொலை வழக்கு உள்ளிட்ட பல்வேறு குற்ற வழக்குகள் உள்ளன. 2 பேரும் சம்பந்தப்பட்ட வழக்குகளில் கைது செய்யப்பட்டு, தற்போது ஜாமீனில் வெளியே உள்ளனர்.இந்நிலையில் இவர்கள் 2 பேரும் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பலருக்கு மிரட்டல் விடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இது குறித்து போலீசாருக்கு தகவல் வந்த நிலையில், 2 பேரையும் காரைக்கால் மாவட்டத்துக்குள் நுழைய அனுமதிக்கக் கூடாது என போலீஸ் சூப்பிரண்டு சுப்பிமணியம், இன்ஸ்பெக்டர் லெனின் பாரதி ஆகியோர் மாவட்ட துணை கலெக்டர் ஆதர்சுக்கு பரிந்துரை செய்தனர். அதன்படி 2 பேரையும் 144 சட்டத்தின் கீழ், காரைக்கால் மாவட்டத்துக்குள், நேற்றி லிருந்து 2 மாதத்திற்கு நுழைய தடை விதித்து மாவட்ட துணை கலெக்டர் ஆதர்ஷ் உத்தரவிட்டுள்ளார்.

    ×