search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலவு பயணம்"

    • ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவதை பொறியாளர்கள் கண்டறிந்தனர்.
    • கடந்த 29-ம் தேதி தொழில்நுட்ப கோளாறு காரணமாக கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.

    வாஷிங்டன்:

    மனிதர்களை மீண்டும் நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக தற்போதைய நிலவின் சூழல் குறித்த ஆராய்ச்சிக்காக ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ் 1 ராக்கெட்டை அனுப்ப திட்டமிட்டுள்ளது.

    கடந்த 29-ம் தேதி இந்திய நேரப்படி மாலை 6 மணியளவில் இந்த ராக்கெட்டை விண்வெளிக்கு அனுப்பும் பணி தொடங்க திட்டமிடப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் புறப்படுவதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கப்பட்டது. அப்போது எதிர்பாராதவிதமாக சில தொழில்நுட்ப கோளாறுகள் ஏற்பட்டதன் காரணமாக கவுன்ட்-டவுன் நிறுத்தப்பட்டது.

    பின்னர் தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று இரவு 11.47 மணிக்கு ராக்கெட் விண்ணில் ஏவப்படும் என்று நாசா அறிவித்து இருந்தது. இந்நிலையில் ராக்கெட்டில் இருந்து எரிபொருள் கசிவை நாசா பொறியாளர்கள் கண்டறிந்தனர். அதி குளிர் திரவ ஹைட்ரஜன் உள்ளே செலுத்தப்பட்டதால் ராக்கெட்டின் அடிப்பகுதிக்கு அருகில் கசிவு கண்டறியப்பட்டது.

    ராக்கெட்டின் நான்கு முக்கிய எஞ்சின்களில் ஒன்று மிகவும் சூடாக இருப்பதை சென்சார் காட்டியதும் ராக்கெட்டை ஏவும் முயற்சி நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ராக்கெட் ஏவும் முயற்சி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக 2வது முறையாக நாசா அறிவித்துள்ளது.

    • ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது.
    • கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு ராக்கெட் அனுப்பப்படுகிறது.

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த

    இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது. கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து கடந்த ஆகஸ்டு மாதம் 29-ம் தேதி மாலையில் ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது.

    ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், நிலவுக்கு மனிதனை அனுப்பும் சோதனை முயற்சியாக நாசாவின் ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டை அமெரிக்கா இன்று விண்ணில் ஏவுகிறது. புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து இந்திய நேரப்படி இன்றிரவு 11.47 மணிக்கு ராக்கெட் அனுப்பப்படுகிறது.

    ஆர்டெமிஸ்-1 ராக்கெட்டில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இந்த முடிவு ஒத்திவைக்கப்பட்டிருந்தது. தற்போது தொழில்நுட்ப கோளாறு சரிசெய்யப்பட்டதை அடுத்து ஓரியன் விண்கலத்துடன் ஆர்டெமிஸ்-1 ராக்கெட் இன்று ஏவப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    • கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் யாரும் நிலவுக்கு அனுப்பப்படமாட்டார்கள்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா, மனிதர்களை நிலவுக்கு அனுப்புவதற்கான ஆர்டெமிஸ் திட்டத்தை தொடங்கியுள்ளது. 2025க்குள் மனிதர்களை நிலவுக்கு அனுப்ப திட்டமிட்டுள்ள நாசா, ஆர்டெமிஸ் 1 திட்டத்தை செயல்படுத்த உள்ளது. இந்த திட்டத்தின் முதல்படியாக நிலவு குறித்த ஆராய்ச்சிக்காக, ஓரியன் விண்கலத்தை எஸ்எல்எஸ் ராக்கெட் மூலம் அனுப்ப ஏற்பாடு செய்யப்பட்டது.

    கென்னடி விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து இன்று மாலையில் ராக்கெட் ஏவப்படும் என அறிவிக்கப்பட்டு அதற்கான கவுண்ட் டவுன் தொடங்கப்பட்டது. ஆனால் கடைசி நேரத்தில் ராக்கெட் என்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக ராக்கெட்டை செலுத்தும் திட்டம் ஒத்திவைக்கப்பட்டது. இனி செப்டம்பர் 2ம்தேதி செலுத்த திட்டமிட்டுள்ளனர். ஆனால் அன்றைய தினம் ராக்கெட் செலுத்தப்படுமா? என்பதை நாசா உறுதிப்படுத்தவில்லை.

    பாதுகாப்பு எப்போதும் முக்கியம் என்று கூறி உள்ள நாசா, ராக்கெட்டின் மூன்றாவது என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணி நடைபெறுவதாக தெரிவித்துள்ளது.

    ஆர்ட்டெமிஸ் 1 திட்டத்தில் விண்வெளி வீரர்கள் அனுப்பப்படமாட்டார்கள். சோதனை முயற்சியாக மனிதர்களை போன்ற பொம்மைகளை ஓரியன் விண்கலத்தில் அனுப்ப உள்ளனர். மனித பொம்மைகளை நிலவுக்கு கொண்டு செல்லும் ஓரியன் விண்கலம், கலிபோர்னியாவின் சான் டியாகோ கடற்கரையில் பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.

    ×