search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிலங்களை"

    • ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு நடை பெற்றது.
    • இம் மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்தார்கள் சங்க பொருளாளர் சண்முகராஜ் உள்பட 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    சிவகிரி:

    ஈரோடு மாவட்டம் சிவகிரியில் கீழ்பவானி ஆயக்கட்டு பாசன உரிமை பாதுகாப்பு மாநாடு நடை பெற்றது.

    இம்மாநாட்டிற்கு கீழ்பவானி முறைநீர் பாசன விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் காசியண்ணன் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் ஆறுமுகம் வரவேற்று பேசினார். துணைத் தலைவர் ராமசாமி முன்னிலை வகித்தார்.

    மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் எல்.பி.பி. கால்வாய் சீரமைத்து அனைத்து ஆயக்கட்டு பாசனத்துக்கு சமச்சீரான தண்ணீர் வழங்க வேண்டும்.

    நகரமயமாதல் காரண மாக பாசனம் பெறாத சுமார் 10 ஆயிரம் ஏக்கர் நிலங்களை ஆயக்கட்டில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும்.

    34 கசிவு நீர் திட்டத்தின் கீழ் உள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயக்கட்டில் இணைக்க வேண்டும்.

    கீழ்பவானி ஆயக்கட்டில் இல்லாத முறைகேடான நீரேற்று பாசனங்களை உடனே தடை செய்ய வேண்டும்.

    தாராபுரம் கட்என்ற பெயரில் நீக்கம் செய்துள்ள 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை கீழ்பவானி ஆயகட்டு பாசனத்தில் இணைக்க வேண்டும் என்பன உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

    கீழ்பவானி ஆயகட்டு பாசனதாரர்கள் சங்க தலைவர்பெரியசாமி, செயலாளர் பொன்னையன் ஆகியோர் மாநாட்டின் கொள்கைகளை விளக்கிப் பேசினார்கள்.

    இம் மாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஈரோடு மாவட்ட செயலாளர் சுப்பு, கீழ்பவானி ஆயக்கட்டு பாசனத்தார்கள் சங்க பொருளாளர் சண்முகராஜ் உள்பட 1000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

    முடிவில் எல்.5 பாசன செயலாளர் செங்கோட்டு வேலுமணி நன்றி கூறினார்.

    ×