search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவுத் தினம்"

    • அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்திய ஆசிரியர்கள், மாணவர்கள்
    • அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர்

    அரியலூர்,

    முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் நினைவு நாளையொட்டி, அரியலூர் மாவட்டத்திலுள்ள பள்ளிக், கல்லூரிகளில் அவரது படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    அரியலூர் அருகேயுள்ள சிறுவளூர் அரசு உயர்நிலைப் பள்ளியில், அப்து ல்கலாம் படத்துக்கு, அப்பள்ளியின் தலைமை ஆசிரியர் சின்னதுரை, அரியலூர் அரசு கலைக் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் ராமலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் செந்தமிழ் செல்வி, தனலட்சுமி, தங்கபாண்டி இளநிலை உதவியாளர் மணி கண்டன், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

    தொடர்ந்து அனைவரும் உறுதிமொழி எடுத்துக் கொ ண்டனர். லிங்கத்தடிமேடு வள்ளலார் கல்வி நிலையத்தில் பள்ளி தலைமை ஆசிரியர் சௌ ந்தர்ராஜன் தலைமையில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்டோர் அப்துல்கலாம் படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர். இதே போல் மாவட்ட த்திலுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூ ரிகளில் அப்துல்கலாம் நினைவுத் தினம் அனுசரி க்கப்பட்டது.

    ×