search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நினைவு அஞ்சலி"

    • வசந்தகுமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.
    • ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    மார்த்தாண்டம் :

    மறைந்த முன்னாள் எம்.பி.வசந்தகுமார் 3-ம் ஆண்டு நினைவேந்தல் கூட்டம் கன்னியாகுமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் மார்த்தாண்டம் வடக்கு தெருவில் உள்ள எம்.பி.அலுவலகத்தில் வைத்து அனுசரிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர்.பினுலால் சிங் தலைமை தாங்கினார்.கிள்ளியூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ்குமார் முன்னிலை வகித்தார். வசந்தகுமார் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.

    நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் பால்மணி, மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் செல்வகுமார், கிள்ளியூர் வட்டாரத் தலைவர் ராஜசேகரன், முஞ்சிறை வட்டாரத் தலைவர் விஜயகுமார், மேல்புறம் வட்டாரத் தலைவர் ரவிசங்கர், துணைத் தலைவரும் களியக்காவிளை பேரூராட்சி தலைவருமான சுரேஷ், உண்ணாமலை கடை பேரூராட்சி தலைவி பமலா, கொல்லஞ்சி ஊராட்சித் தலைவி சலோமி உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    மேல்புறம் கிழக்கு வட்டார காங்கிரஸ் முன்னாள் தலைவர் சதீஷ் தலைமையில் வசந்தகுமார் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் ஏழை, எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

    ×