search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நிதிஷ் ரானா"

    • கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு போட்டியில் இருந்து பெற்ற பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது.
    • மும்பை அணியின் சுழற்பந்து வீரர் ஹிர்திக்குக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    மும்பை:

    ஐ.பி.எல். போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடந்த ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் 5 விக்கெட் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சை தோற்கடித்து மும்பை அணி 2-வது வெற்றியை பெற்றது. கொல்கத்தா 3-வது தோல்வயை தழுவியது.

    இந்தப் போட்டியின் போது கொல்கத்தா அணி கேப்டன் நிதிஷ்ரானாவுக்கும், மும்பை சுழற்பந்து வீரர் ஹிர்திக் ஷோகீனுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. மும்பை அணியின் தற்காலிக கேப்டன் சூர்யகுமார் யாதவ் உள்ளிட்ட வீரர்கள் ரானாவை சமாதானப்படுத்துகிறார்கள்.

    இதுகுறித்து போட்டி நடுவர் விசாரணை மேற்கொண்டனர். இருவரும் வீரர்களின் நடத்தை விதியை மீறியது கண்டறியப்பட்டது. இருவரும் தங்களது குற்றத்தை ஒப்புக்கொண்டனர். இதை தொடர்ந்து இருவர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

    இருவருக்கும் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. கொல்கத்தா கேப்டன் நிதிஷ் ரானாவுக்கு போட்டியில் இருந்து பெற்ற பணத்தில் 25 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டு உள்ளது. மும்பை அணியின் சுழற்பந்து வீரர் ஹிர்திக்குக்கு 10 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    இதேபோல மும்பை இந்தியன்ஸ் கேப்டன் சூர்யகுமார் யாதவுக்கும் ரூ.12 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது. மும்பை அணி மெதுவாக பந்து வீசியதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் 20 ஓவரை வீசி முடிக்கவில்லை. கூடுதல் நேரம் எடுத்துக் கொண்டது. இதனால் மெதுவாக பந்து வீசியதற்காக அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.

    • கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது.
    • காயம் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயர் முதல் பாதியில் இடம் பெற மாட்டார் என்றும், பின்பாதியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    ஐபிஎல் கிரிக்கெட் வரும் 31-ம் தேதி பிரம்மாண்டமாக தொடங்க இருக்கிறது. முதல் போட்டியிலேயெ நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. இந்தப் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடக்கிறது.

    இதுவரையில் கௌதம் காம்பீர் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 2012 மற்றும் 2014 ஆம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டம் பெற்றுள்ளது. அதன் பிறகு கொல்கத்தா அணி சாம்பியன் பட்டம் பெறவில்லை. இந்த நிலையில், கடந்த சீசனில் கேப்டனாக இருந்த ஷ்ரேயாஸ் ஐயர், காயம் காரணமாக அவர் முதல் பாதியில் இடம் பெற மாட்டார் என்றும், பின்பாதியில் இடம் பெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.


    இதன் காரணமாக ஷ்ரேயாஸ் ஐயருக்குப்பதிலாக நிதிஷ் ராணாவை கொல்கத்தா அணி நிர்வாகம் கேப்டனாக நியமித்துள்ளது.

    இந்நிலையில் கேப்டனாக பொறுப்பேற்றுள்ள நிதிஷ் ராணா மற்றும் பயிற்சியாளர் சந்திரகாந்த் பண்டிட் ஆகியோர் கொல்கத்தாவில் உள்ள மிகவும் புகழ்பெற்ற காளி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    ×