என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "நிதி நிறுவன மோசடி"
- நிறுவனத்தில் முதலீடு செய்தால் 12 சதவீத வட்டியுடன் பணம் தருவதாக கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டனர்.
- நிதி நிறுவன வங்கி கணக்குகளை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
பெரம்பூர்:
பெரம்பூர் பாரதி சாலையில் பரஸ்பர சகாய நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது.
இந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் 12 சதவீத வட்டியுடன் பணம் தருவதாக கவர்ச்சி அறிவிப்புகள் வெளியிட்டனர். இதனை நம்பி ஏராளமானோர் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தை லட்சக்கணக்கில் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்தனர். ஆனால் கூறியபடி நிதி நிறுவனம் பணத்தை கொடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதுகுறித்து பணத்தை இழந்தவர்கள் போலீசில் புகார் செய்தனர். இது தொடர்பாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதில் கூடுதல் பணம் தருவதாக பொதுமக்களின் முதலீடுகளை பெற்று ரூ.200 கோடி வரை மோசடி செய்து இருப்பது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து நிதி நிறுவன பெண் இயக்குனர்களான வசந்தி ஈஸ்வரப்பன், அவரது மகள் சக்தி ஐஸ்வர்யா, ராஜம்கண்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் விசாரணை நடந்து வருகிறது.
நிதி நிறுவன வங்கி கணக்குகளை முடக்கும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகிறார்கள்.
- தமிழகத்தில் அதிக வட்டித்தொகை தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன.
- வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
சென்னை:
தமிழகம் முழுவதும் குறிப்பிட்ட 4 நிதி நிறுவனங்கள் முதலீட்டு தொகை பெற்று பொதுமக்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி மோசடி செய்துள்ளதாகவும், ஏமாந்த பொதுமக்களுக்கு உரிய முதலீட்டு தொகையை மீட்டு தருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. ஆசியம்மாள் கூறினார்.
இதுதொடர்பாக அவர் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் அதிக வட்டித்தொகை தருவதாக ஆசை காட்டி பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று 4 நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடி செய்துள்ளன. முதலீட்டு தொகைக்கு மாத வட்டியாக 25 சதவீதம் முதல் 30 சதவீதம் வரை வழங்கப்படும் என்று கவர்ச்சியான அறிவிப்புகளை வெளியிட்டு பொதுமக்களிடம் முதலீட்டு தொகையை பெற்று ஏமாற்றி உள்ளனர்.
சென்னை அமைந்தகரையில் செயல்பட்ட 'ஆருத்ரா கோல்டு' நிறுவனம், கீழ்ப்பாக்கத்தில் இயங்கிய 'ஹிஜாவு' நிறுவனம், கிண்டியில் செயல்பட்ட 'எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ்.' நிறுவனம், திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கிய 'எல்பின்' நிறுவனம் ஆகிய 4 நிதி நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் தொடர்புடைய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
வெளிநாடுகளுக்கு தப்பியோடியவர்களை கைது செய்வதற்கு சி.பி.ஐ. போலீஸ் உதவியுடன் சர்வதேச போலீஸ் மூலமாக உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதற்காக பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.
வெளிநாடுகளுக்கு தப்பி சென்றவர்களை பிடித்து கொடுக்க 'ரெட் கார்னர்' நோட்டீசு வழங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது 'லூக் அவுட்' நோட்டீசும் அனுப்பப்பட்டுள்ளது. மேற்கண்ட 4 நிதி நிறுவனங்களும் தமிழகம் முழுவதும் 2 லட்சத்து 84 ஆயிரம் பேர்களிடம் ரூ.13 ஆயிரத்து 700 கோடி அளவுக்கு முதலீட்டு தொகை பெற்று மோசடி செய்துள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த 4 நிறுவனங்களில் 1,115 வங்கி கணக்குகள் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான கார்கள் போன்ற அசையும் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அசையா சொத்துக்களை கணக்கிட்டு வருகிறோம். மேற்கண்ட நிதி நிறுவனங்களிடம் பணத்தை இழந்த பொதுமக்கள் கவலைப்பட தேவையில்லை. அவர்கள் ஏமாந்த பணத்தை கோர்ட்டு மூலமாக பெற்று தர உரிய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
பொருளாதார குற்றப்பிரிவு போலீசை வலுப்படுத்த 28 சப்-இன்ஸ்பெக்டர்களை கூடுதலாக பணி நியமனம் செய்து டி.ஜி.பி. உத்தரவிட்டுள்ளார். இந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் மூலம் பல்வேறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகளை கைது செய்தல், மோசடி நிறுவனங்களின் சொத்துக்களை கண்டறிதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறோம்.
இந்த 4 நிதி நிறுவனங்களில் எல்.என்.எஸ்.-ஐ.எப்.எஸ். நிதி நிறுவனம் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துவிட்டோம். மற்ற 3 நிறுவனங்கள் மீதும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- இருவரும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர்.
- மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 5 இயக்குனர்கள் தலைமறைவாக உள்ளனர்.
சென்னை:
ஐ.எப்.எஸ். என்ற பெயரில் செயல்பட்டு வந்த நிதி நிறுவனம் பொதுமக்களிடம் இருந்து அதிக வட்டி ஆசை காட்டி ரூ.6 ஆயிரம் கோடிக்கு மேல் பண வசூலில் ஈடுபட்டது தெரிய வந்தது.
இது தொடர்பாக சென்னை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். போலீஸ் சூப்பிரண்டு ஜெயச்சந்திரன் தலைமையிலான போலீசார் இந்த வழக்கின் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்டு வந்த 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்த குப்புராஜ், ராணிப்பேட்டையைச் சேர்ந்த ஜெகநாதன் ஆகிய 2 பேரும் ஐ.எப்.எஸ். நிதி நிறுவனத்தில் ஏஜெண்டுகளாக செயல்பட்டதும், பொதுமக்களிடம் கோடிக்கணக்கில் மோசடி செய்திருப்பதும் தெரிய வந்தது.
இதைத்தொடர்ந்து 2 பேரையும் டி.எஸ்.பி. கபிலன் தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
இவர்கள் இருவரும் பொதுமக்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாயை வசூல் செய்திருப்பதாக பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளனர். இவர்களிடம் இருந்து சொத்து ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளிகளான 5 இயக்குனர்கள் தலைமறைவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்