search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாடக அரசியல்"

    • அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.
    • அண்ணாமலையின் நாடக அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது என்று பசும்பொன் பாண்டியன் கூறினார்.

    மதுரை

    அண்ணா திராவிட மக் கள் முன்னேற்ற கழக பொது செயலாளர் சே.பசும்பொன் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கை யில் கூறியிருப்பதாவது:-

    ரோம்நகர் தீப்பிடித்து எரியும் போது நீரோ மன்னன் பிடில் வாசித்த தைப் போல இந்திய ஒன்றி யம் முழுவதும் பா.ஜ.க. வினால் வன்முறைத் தீ பற்றி எரிகிறது மணிப்பூர் வன்முறையை உடனே தடுத்து நிறுத்தா விட்டால் உச்ச நீதிமன்றமே தலையிடும் என தலைமை நீதியரசர் ஒன்றிய அரசை எச்சரித்தற்கு பிறகு பிரதமர் பட்டும் படா மலும் மணிப்பூர் கலவரம் குறித்து சில நொடிகளில் பேட்டியளித்துச் சென்ற காட்சியை உலகமே எள்ளி நகையாடுகிறது கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக நாடாளுமன்றத்திற்கு வர மறுக்கும் பிரதமரின் செய லுக்கு அனைத்து தரப்பிலும் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

    இதை மூடி மறைப்ப தற்காக அமைதிப் பூங்கா வான தமிழகத்தில் பாதயாத் திரை என்ற பெயரில் சொகுசு வாகனத்தில் அண்ணாமலை பயணம் சென்று வருகிறார் தமிழ் மண்ணைப் பொறுத்தளவில் திராவிட இயக்கத்தின் அடிப்படைக் கொள்கையில் சுயமரியாதை, சமூக நீதி, சமதர்மம், இன உரிமை, மாநில சுயாட்சி,இந்தியக் கூட்டாச்சி ஆகிய கோட் பாடுகளில் பேணிக் காத்து வருகிறது.

    கவர்னர் ரவியும் அண்ணாமலையும் தினமும் புலம்பி வருவதை நாட்டு மக்களும் திராவிட இயக்க மும் சிறிது கூட அவர்களை பொருட்படுத்தவில்லை, திராவிட இயக்கத்தின் கொள்கையில் தமிழக மக்கள் பட்டைத் தீட்டப்பட்ட வைரமாக திகழ்ந்து வரு கிறார்கள். மணிப்பூரில்

    இரு பழங்குடி இனப்பெண் பாலியல் வன்கொடு மைக்கு உள்ளாக்கப்பட்டு 80 நாட்களுக்கு பிறகே காவல் துறை முதல் தகவல் அறிக் கையை பதிவு செய்துள்ளது அவ்விரு பெண்களையும் காவல்துறையினரே போராட்டக்காரர்களிடம் ஒப்படைத்ததாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது. இத்தகைய சூழலில் இது தொடர்பான வழக்கை மாநில காவல்துறையினர் விசாரிப்பது பொருத்தமாக இருக்காது இதை விசாரிக்க முன்னாள் நீதிபகள் கொண்ட சிறப்பு புலனாய் வுக் குழு அல்லது ஒரு சிறப்பு குழுவை அமைப்பது தொடர்பாக முடிவெடுக்கப் படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் அறிவித்துள்ளது வரவேற்கத்தாகும்.இது பிரதமர் மோடிக்கும், மணிப்பூர் மாநில பாஜக அரசிற்கும் பெருத்த அவமா னமாகும், பா.ஜ.க.விற்கு ஏற் பட்டிருக்க கூடிய அவமா னங்களை மூடி மறைப்ப தற்காக பாதயாத்திரை என்ற பெயரில் தமிழகத்தில் அண்ணாமலை நடத்திக் கொண்டிருக்கிறார்.

    இத்தகைய நாடக அரசி யல் தமிழ்நாட்டில் எடுபடாது என்பதை 2024 தேர்தலில் பாஜகவிற்கு தமிழ் மண் சரியான பாடம் புகட்டும்.

    இவ்வாறு அவர் கூறி யுள்ளார்.

    ×